ஆப்நகரம்

சிகிச்சையே இல்லாமல் ஹெச்ஐவி - எய்ட்ஸில் இருந்து மீண்ட இரண்டாவது பெண்...

எய்ட்ஸ் பாதித்த அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர் எவ்வித சிகிச்சையும் இன்றி இயற்கையாகவே எய்ட்ஸில் இருந்து மீண்டதைக் கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் குழு அறிவித்துள்ளது. அவர் எப்படி எயிட்ஸில் இருந்து மீண்டார் என்பது குறித்து இங்கு பார்ப்போம் வாங்க.

Samayam Tamil 17 Nov 2021, 7:02 pm
எய்ட்ஸ் என்பது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைத் தாக்கி அதைச் செயலிழக்கச் செய்யும் நோய். இந்த நோயை உருவாக்குவது ஒரு வைரஸ் தான். நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது தாக்குவதால் தான் இதனை Human Immunodeficiency Virus என்று கூறுகிறோம்.
Samayam Tamil woman cured from hiv aids without medication by natural immune system
சிகிச்சையே இல்லாமல் ஹெச்ஐவி - எய்ட்ஸில் இருந்து மீண்ட இரண்டாவது பெண்...


உயிர்கொல்லி நோய் எய்ட்ஸ்

எய்ட்ஸ் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ஆய்வை நடத்தும் ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, சமீபத்தில் நடத்திய ஆய்வில், இயற்கையாகவே எச்ஐவி நோயில் இருந்து விடுபட்ட ஒரு நோயாளியைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், எச்ஐவியில் இருந்து விடுபட்ட நோயாளி அர்ஜென்டினாவைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் என்றும், சிகிச்சைக்காக எந்தவிதமான தீவிர மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் இருந்து நோயிலிருந்து குணமடைந்தார் என்று அறிவித்துள்ளது.

weight loss tips: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பால் குடிக்கலாமா?

முதலில் எய்ட்ஸ் பாதித்த அந்தப் பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் வரை எந்தவிதமான அறிகுறிகளும் காட்டவில்லை. அதற்குப் பின்னர் தான் அதற்கான அறிகுறிகள் அப்பெண்ணுக்கு வந்தன. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் எய்ட்ஸ் இல்லாத தலைமுறையை உருவாக்க உதவும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

வைட்டமின் டி அதிகமுள்ள டாப் 10 உணவுகள் என்னென்ன...

2020-ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,00,000 பேர் எச்ஐவி வைரஸால் இறந்துள்ளனர். மேலும், சுமார் 40 மில்லியன் மக்கள் எச்ஐவி நோயுடன் வாழ்கின்றனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோயிலிருந்து மீண்ட இரண்டாவது பெண்

சர்வதேச நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வு குறித்து மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள குறிப்பில், எச்ஐவி வைரஸை இயற்கையாகவே தோற்கடித்த இரண்டாவது நோயாளி இந்தப் பெண் என்று கூறியுள்ளது. எய்ட்ஸில் இருந்து மீண்ட முதல் நோயாளி லோரீன் வில்லன்பெர்க் ஆவார். இவர் 2013-ம் ஆண்டு தனது 67-வது வயதில் நோயிலிருந்து மீண்டார். இந்த நிலையில், இப்போது குணமாகியுள்ள பெண்மணிக்கு எச்ஐவி 2013-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது உடலில் வைரஸின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எய்ட்ஸில் இருந்து மீண்ட 30 வயதான அந்தப் பெண்மணி 2020-ல் கர்ப்பமாக இருந்தார். அவர் கர்ப்பமான நாளில் இருந்து அவருக்கு குழந்தை பிறக்கும் தேதி வரை, அப்பெண்ணின் இரத்த மாதிரிகள் மற்றும் நஞ்சுக்கொடி திசுக்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வந்தனர். நிபுணர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் ஆன்டி ரெட்ரோவைரல் மருந்து எடுத்துக் கொண்டாலும், எச்ஐவி பாதிக்காத குழந்தையைப் பெற்றெடுத்தார்.

திருமணமான பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்... சமீரா ரெட்டி கூறும் பாடி பாசிடிவ் அட்வைஸ்

எய்ட்ஸில் இருந்து எப்படி விடுபட்டார் ?

அந்தப் பெண் எச்ஐவியில் இருந்து மீள என்ன காரணிகள் உதவியது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், இதில் வெவ்வேறு நோய் எதிர்ப்பு வழிமுறைகள் மற்றும் சைட்டோடாக்ஸிக் டி செல்கள் சம்பந்தப்பட்ட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்