ஆப்நகரம்

செம்பருத்தி பூவை தினமும் 2 சாப்பிடுவதால் என்னென்ன நோய் குணமாகும்னு தெரியுமா?

செம்பருத்தி பூ நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் இரத்த அழுத்தத்தில் இருந்து நோயெதிர்ப்பு சக்தி வரை அதிகரிக்கிறது. இதன் கூடுதல் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

Samayam Tamil 28 Aug 2020, 4:12 pm
செம்பருத்தி பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆந்தோசயனின் மற்றும் ப்ளோவனாய்டுகள் போன்றவைகள் காணப்படுகின்றன. இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
Samayam Tamil 6 incredible reasons that prove hibiscus flower belongs on your diet plan
செம்பருத்தி பூவை தினமும் 2 சாப்பிடுவதால் என்னென்ன நோய் குணமாகும்னு தெரியுமா?



​செம்பருத்தி மலர்

இந்த செம்பருத்தி இந்தியாவில் அதிகளவில் காணப்படும் மலர்களில் ஒன்று. இத நீங்கள் செம்பருத்தி டீயாக கூட எடுத்து வரலாம். ஷரத் அழுத்தத்தை பராமரிக்கும் உதவுகிறது. கொழுப்பை கரைக்க உதவுகிறது.

நிலையில் செம்பருத்தி பூவின் இன்னும் சிறப்பான நன்மைகளை பற்ற அறிந்து கொள்வோம்.

​இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜி பத்திரிகையில் வெளியிடப்பட்ட கருத்துப்படி செம்பருத்தி பூ டீயை தொடர்ந்து 12 நாட்கள் குடித்து வந்தால் சிஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 11.2% வரை குறைகிறது. டயஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 10.7% வரை குறைகிறது. உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் செம்பருத்தி டீயை குடித்து வரலாம்.

எலுமிச்சை நீர் Vs வெந்தய நீர் - எடையைக் குறைக்க ரெண்டில் எது பெஸ்ட்?

​இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

உயர் இரத்த சர்க்கரை உங்கள் நரம்புகள், கண்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், இது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே செம்பருத்தி சாற்றை 21 நாட்கள் குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.

இரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது

இரத்த குழாயை அடைக்கும் கொழுப்பால் இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகம். இந் பூவின் சாற்றை பிழிந்து வாய்வழியாக எடுத்துக் கொண்டு வரும் போது இரத்த கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை 22% வரை குறைக்கிறது.

இது நல்ல கொலஸ்ட்ரால் (எச். டி.எல்) அளவை அதிகரிக்கிறது. இந்த பூவில் உள்ள சபோனின் உடம்பானது கொழுப்புகளை உறிஞ்சுவதை தடுக்கிறது.

ஆஸ்துமாவை அதிகப்படுத்தும் விஷயங்கள் என்னென்ன? எப்படி சமாளிக்க வேண்டும்?

​கூந்தல் வளர்ச்சி

செம்பருத்தி பூ இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ்ட்கள் அந்தக் காலத்தில் இருந்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடியை பலப்படுத்துகிறது. எனவே செம்பருத்தி பூவைக் கொண்டு சாம்பு தயாரிப்பது உங்க கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக அமையும்.

​நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இது நோயெதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராடும் திறன் வாய்ந்தது. செம்பருத்தி பூ சாற்றில் உள்ள சில மருத்துவ குணங்களை மனித செல்களில் உள்ள டி செல்கள் பி செல்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே தினமு‌ம் 1கப் செம்பருத்தி டீ குடிப்பது உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

தினம் வெறும் வயிற்றில் 8-10 கறிவேப்பிலை இலை சாப்பிட்டா உடம்புல என்னலாம் நல்லது நடக்கும்?

​சரும புற்றுநோயை தடுக்கிறது

சருமத்தில் அதிகப்படியான சூரிய ஒளி படும் போது சரும புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க செம்பருத்தி பூ உதவுகிறது. செம்பருத்தி பூ சாற்றை பருகி வரும்படி தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை பெற முடியும். இது சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. எனவே செம்பருத்தி பூவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு பலன் அடைவோம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்