ஆப்நகரம்

world asthma day 2023 : ஆஸ்துமாவை கட்டுப்படுத்த தேன் போதுமாம், ஆனா இப்படித்தான் எடுக்கணுமாம்!

இன்று உலக ஆஸ்துமா தினம். ஆஸ்துமா என்பது நுரையீரலின் காற்றுப்பாதைகளில் ஏற்படும் ஒரு பொதுவான அழற்சி நோய். இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறையில் பரிந்துரைக்கப்படும் மூலிகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 11 May 2023, 10:42 am
Samayam Tamil ayurvedic home remedies for asthma treatment in tamil
world asthma day 2023 : ஆஸ்துமாவை கட்டுப்படுத்த தேன் போதுமாம், ஆனா இப்படித்தான் எடுக்கணுமாம்!
ஆஸ்துமா முடிவற்ற நிலை. இது காற்றுப்பாதைகளை பாதிக்கிறது. மூச்சுத்திணறல் காரணத்தால் ஆஸ்துமா நோயாளிகள் சரியான சுவாசத்தை எடுக்க முடியாது. இந்நிலையில் உடனடி சிகிச்சை தேவைப்படும். அதனால் ஆஸ்துமா நோயாளிகள் தங்களுக்கு நன்மை செய்யும் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விஷயங்களையும் தவிர்க்காமல் கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு செய்யப்படும் சிகிச்சையின் ஊடே ஆயுர்வேத மூலிகைகளும் இவர்கள் அறிகுறியை குறைக்க செய்யும். இயற்கையான மூலிகைகளான இது ஆஸ்துமா நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

​ஆஸ்துமா என்றால் என்ன?​

ஆஸ்துமா என்பது நாள்பட்ட நுரையீரல் நோய். நுரையீரலுக்கு செல்லும் பாதையில் துர்நாற்றத்தை தூண்டும் நோயாகும். இது சுவாசம் மற்றும் பல்வேறு உடல் பயிற்சிகளை சிக்கலாக்குகிறது.
ஆஸ்துமா தாக்குதலானது காற்றுப்பாதைகளின் புறணி வீக்கம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள தசைகளின் இறுக்கம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. காற்றுப்பாதைகளை சளி நிரப்புகிறது. இதனால் காற்றின் அளவு குறைந்துவிடுகிறது.
ஆயுர்வேத முறையில் ஆஸ்துமா வுக்கு சிகிச்சை அளிக்கும் போது அது நேர்மறையான முடிவுகளை தருகிறது. மேலும் நோய்களை எதிர்த்து போராட உள் அமைப்பை பலப்படுத்துகிறது.

அமுக்கிரா கிழங்கோட நன்மை தெரியுமா?

​ஆஸ்துமா அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

இரவில் இருமல்
மூச்சுத்திணறல்
விசில் சத்தம்
மார்பு இறுக்கம்
சோர்வு
மூச்சுத்திணறல் போன்றவை.

ஆயுர்வேதத்தின் படி ஆஸ்துமாவுக்கு வாத மற்றும் கப தோஷங்கள் காரணமாகின்றன. கப தோஷம் காற்றுப்பாதையை மூச்சுத்திணற செய்கிறது. வாதமானது சளி பாதையின் ஓட்டத்தை தொல்லை செய்கிறது. இது ஆஸ்துமா அறிகுறிகளை உண்டு செய்கிறது.

மூச்சுக்குழாய் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஆஸ்துமாவின் இரண்டு முக்கிய வகைகள், மூச்சுக்குழாய் நுரையீரலின் பலவீனத்தால் உண்டாகிறது. ஒவ்வாமையாலும் உண்டாகிறது.

சுற்றுச்சூழல்
மாசுபடுத்திகள்
ஒவ்வாமை
வைரஸ் தொற்றுகள்
அதிக எடை
அழுத்தமான வாழ்க்கை முறை
மரபணு போன்றவை காரணங்களாகிறது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படும் மூலிகைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

​ஆஸ்துமா அறிகுறி குறைய வாழைப்பழம், தேன் மற்றும் கிராம்பு எப்படி எடுப்பது?​

தேன் மற்றும் கிராம்பு இரண்டுமே நுரையீரலை வலுப்படுத்த செய்யும். வாழைப்பழத்துடன் 7 கிராம்பு கலந்து பிசைந்து சில மணி நேரம் கழித்து சாப்பிடலாம். அதற்கு பிறகு ஒரு மணி நேரம் எதையும் சாப்பிட வேண்டாம். தேவையெனில் இதனுடன் தேன் மற்றும் வெந்நீரை சேர்க்கவும். நாள்பட்ட மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இவை அறிகுறியை குறைக்கும்.

​ஆஸ்துமா நோயாளிகளுக்கு கண்டங்கத்திரி​

ஆஸ்துமா நோயாளிகளுக்கு 7 முதல் 14 மில்லி கண்டங்கத்திரி சாறு பயனளிக்கும். முழு தாவரத்திலிருந்து அல்லது அதன் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் இதை நாள் ஒன்றுக்கு இரண்டு நாட்கள் எடுத்துவந்தால் போதுமானது. அறிகுறிகளை நன்றாக குறைக்க செய்யும்.

​ஆஸ்துமா அறிகுறியை போக்க முலிகை தேநீர் உதவுமா?​

மூலிகை தேநீர் சுவாசப்பாதையை தளர்த்தும். ஓமம். துளசி, மிளகு உடன் இஞ்சி சேர்த்து தயாரிக்கபடும் மூலிகை தேநீர் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பயனுள்ளவை. இவை காற்றுப்பாதையில் சளியை நீக்க கூடியவை. ஆஸ்துமா போன்று உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யக்கூடியவை.

​ஆஸ்துமா அறிகுறி குறைக்கும் மஞ்சள்​

மஞ்சள் ஆயுர்வேதத்தில் முக்கிய மூலிகையாக பார்க்கப்படுகிறது. பல மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்த்மா மூச்சுக்குழாய் நெரிசலை தடுக்க அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் நல்ல நிவாரணம் அடைக்கும். இதில் குர்குமின் என்னு பொருள் மஞ்சளுக்கு நிறமியை அளிக்கிறது. இது ஆக்ஸிஜனேற்ற கூறுகளை உள்ளடக்கியது. இதில் வீக்கத்தை தடுக்கும் திறன் உள்ளது. இவை இயற்கையாகவேஎ மூச்சுக்குழாய் வீக்கத்தை தடுக்கும். ஆஸ்துமாவுக்கு எதிராக மூச்சுக்குழாயை மேம்படுத்தும்.

​ஆஸ்துமா தாக்குதலை தடுக்கும் கருப்பு திராட்சை லேகியம்​

கருப்பு திராட்சை, திப்பிலி, தேன் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து எடுக்கவும். இதை தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு டீஸ்புன்அளவு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

இரவில் அத்திப்பழத்தை ஊறவைத்து அதன் தண்ணீரை குடித்து வந்தால் அவையும் ஆஸ்துமா தாக்குதல்களை குறைக்கும். சளியை அகற்றும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை எடுத்துவரலாம்.

​ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்கும் தேன்​

ஆஸ்துமா அறிகுறிகளில் நெரிசலை குறைக்கவும், மூச்சுத்திணறலை குறைக்கவும் தேன் உதவும். தேனுடன் மிளகு மற்றும் வெங்காயச்சாறு கலந்து வெந்நீரில் குடிக்கவும். இயற்கையான முறையில் இது அறிகுறிகளை குறைக்கும்.

இரவு நேர ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க தேன் உடன் பிரியாணி இலைகளை பொடித்து 1 டீஸ்பூன் கலந்து சாப்பிடலாம்.

​ஆஸ்துமாவுக்கு ஆடாதோடை உதவுமா?​

ஆடாதோடா இலை இந்திய மூலிகையாகும். இது மூச்சுக்குழாய் அழற்சியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டுவருகிறது. இருமல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆடாதோடையை இலையை நீரில் கலந்து குடித்து வருவதன் மூலம் தொண்டைக்கட்டு, தொண்டை தொற்று நீங்கி விடும். இதன் இலைச்சாறும் எடுக்கலாம். மருத்துவரிடம் கேட்டு சரியான முறையில் எடுக்கலாம்.

​ஆஸ்துமாவுக்கு பஞ்சகர்மா சிகிச்சை போதுமா?​

பஞ்சகர்மா சிகிச்சை ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூலிகைகள், மூலிகை எண்ணெய்கள், மருந்து கலந்த பால் மற்றும் பிற ஆயுர்வேத மருந்துகளின் பயன்பாடுகளை உள்ளடக்கிய சிகிச்சை முறையாகும். இது உடல் நச்சு நீக்கும் செயல்முறை என்று சொல்லலாம்.

எச்சரிக்கை:
ஆஸ்துமா நோயாளிகள் சிகிச்சையில் இருக்கும் போது அறிகுறிகள் குறைய இந்த மூலிகைகள் எடுக்கலாம். முன்னதாக இதன் அளவு, பக்கவிளைவுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்து மட்டுமே எடுக்க வேண்டும்.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்