ஆப்நகரம்

தூங்குறதுக்கு முன்னாடி கிராம்பை வெந்நீரில் கலந்து குடித்தால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன...

பழங்காலத்தில் இருந்தே ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை பொருள் கிராம்பு தான். கிராம்பில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதிலும், குறிப்பாக சளி மற்றும் இருமலுக்கு உகந்த மருந்தாக கிராம்பு உதவி புரிகிறது.

Samayam Tamil 10 Jul 2021, 9:37 am
ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனை நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உணவின் சுவையை அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி, உங்கள் வயிற்றை சுத்தம் செய்யவும் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கும். இது போன்ற மற்ற சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Samayam Tamil benefits of clove with warm water at night in tamil
தூங்குறதுக்கு முன்னாடி கிராம்பை வெந்நீரில் கலந்து குடித்தால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன...


​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

கிராம்பு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய தொற்று பரவும் காலகட்டத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கிராம்பு அத்தியாவசியமான பொருளாக உள்ளது. அதிலும் குறிப்பாக கல்லீரலை பாதிக்கக் கூடிய தொற்றிலிருந்து நம்மை காப்பதில் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு தூங்கச் செல்லும் முன் இரண்டு கிராம்பை எடுத்து லேசான சுடுநீரில் போட்டு குடித்தால், காலையில் உங்களின் வயிற்றுக் கழிவுகள் முழுவதும் சுத்தமாகும்.

​சளி, காய்ச்சலுக்கு மருந்தாகும்

அடிக்கடி காய்ச்சல் மற்றும் சளி ஏற்படுபவர்கள் கிராம்பை சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து விடுபடலாம். கிராம்பில் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. கிராம்பினை சாப்பிட்டால் அது நமக்கு ஏற்படும் அலர்ஜி பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும். அத்தோடு சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புடைய மூலிகையாக கிராம்பு செயல்படுகிறது. அதேபோல் தொண்டை மற்றும் பல் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்தவும் கிராம்பு உதவுகிறது.

​ஆக்சிஜன் அளவை அதிகரிக்க

ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை உடைய பொருளில் கிராம்பு முதன்மையானது. மசாலா பொருளான கிராம்பை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இன்றைய கொரோனோ யுகத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து இறப்பு ஏற்படுவது தான் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க நினைப்போர், அரை டம்ளர் தேங்காய்ப் பாலில் அரை டீஸ்பூன் கிராம்புத் தூளை கலந்து குடித்தால் போதும். இதனால் உடலில் உள்ள ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்