நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது ஒரு நபரின் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறைதல் அல்லது அதிகரிக்கும் நிலை. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகின்ற இன்சுலின் ஹார்மோன் சீராக சுரக்காமல் போதல் அல்லது சுரப்பதை நிறுத்துவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆரோக்கியமான நபரின் இயல்பான சர்க்கரை அளவு 120 மிகி/டிஎல் ஆகும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் எளிய வீட்டு வைத்தியம் சில..
துளசி இலைகள்
உடலின் இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை துளசி இலைகள் குறைக்கின்றன. இதை உணவாகவோ அல்லது சேர்க்கைகளாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
செயல்முறை : 2.5கி துளசி பொடி அல்லது 5-8 துளசி இலைகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளுங்கள் . குறிப்பாக காலையில் உண்பது நல்லது.
வெந்தயம்
கடைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய நார்ச்சத்து மிகுந்த மூலிகைப் பொருள் வெந்தயம். இதில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கான மற்றும் குளுக்கோஸ் அளவை சீராக்குவதற்குமான பண்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது. செயல்முறை: 2டீஸ்பூன் வெந்தயத்தை சாதாரண நீரில் இரவு நேரத்தில் ஊறவைத்துவிட்டு, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் பயன்படுத்தினால் நீங்கள் விரும்பிய முடிவுகள் கிடைக்கும் அல்லது வெந்தயத்தை பொடியாக்கி
2டீஸ்பூன் பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்.
பிளாக்பெரி
பிளாக்பெரி "பிளாக் பிளம்" என்றும் அழைக்கப்படுகிறது. சந்தைகளில் எளிதில் கிடைக்கும் பருவகால பழமாகும். இது மாவுச்சத்தை ஆற்றலாக மாற்றி சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையை குறைத்து உங்களுக்கு நிம்மதியை அளிக்கும். செயல்முறை : இதை ஒரு பழமாக நேரடியாக சாப்பிடலாம்.
கொய்யா
கொய்யாக் கனி மட்டும் காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதன் தோலை நீக்கி விட்டு சாப்பிட்டால் இரத்தத்தின் சர்க்கரை உறிஞ்சுதலை குறைக்க உதவுகிறது. காயாக சாப்பிடுவது நல்லது.
அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள்
அன்றாடம் உடற்பயிற்சிசெய்தல் உடல் எடையை குறைக்கவும், உடலில் இன்சுலின் செயல்பாட்டை சீராக்கி மேம்படுத்தவும் உதவுகிறது. இன்சுலின் செயல்பாடு சீராகும் போது உங்கள் செல்களால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரவலாக சீராக பயன்படுத்திக்கொள்ள முடியும். தொடர் உடற்பயிற்சி இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தசைகள் ஆற்றலாக பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் தசை சுருங்குதலுக்கும் உதவுகிறது. இவற்றையெல்லாம் பின்பற்றும் போது உங்கள் உடலின் எதிர்வினையை அறிந்து கொள்ள அடிக்கடி இரத்த சர்க்கரை அளவை சோதனை செய்யவும். இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகவோ , குறைவாகவோ விடாமல் சீராக பராமரிக்கவும்.
அதிக கார்போ உணவுகளை உண்பதை தவிர்க்கவும்
உடல் கார்போக்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. பின் இன்சுலின் குளுக்கோஸை செல்களுக்கு உயிரணுக்களாக கொண்டுசெல்கிறது. நீங்கள் கார்போ உணவுகளை அதிகமாக உண்ணும்போது அல்லது இன்சுலின் சுரப்பதில் அதன் செயல்பாட்டில் கோளாறுகள் இருந்தால் இந்த நடைமுறை பலவீனமாகிறது. இதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்கிறது.
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் பரிந்துரையின்படி, கார்போக்களை கணக்கிடுதல் அல்லது உணவு பரிமாற்ற முறையைப் பயன்படுத்துவதன் மூலம் கார்போ அளவை கட்டுப்படுத்த முடியும். குறைந்த கார்போ உணவு கட்டுப்பாட்டை கொண்டிருப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
பைபர் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்
பைபர் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கார்போ செரிமாணத்தையும், செல்கள் சர்க்கரை உறிஞ்சிதலை சீராக்கி மேம்படுத்தவும் உதவுகிறது. அதிக பைபர் சத்துள்ள உணவு வகைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால் டைப் 1 சர்க்கரை நோயை சீராக்க பயன்படுகிறது. காய்கறிகள் , பழங்கள் , பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் ஆகியவை பைபர் சத்து அதிகரித்துக் காணப்படும் உணவுப் பொருள்களாகும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்
மன அழுத்தம் உங்கள் இரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தம் உண்டாவதால் குளுக்கோகன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சுரக்க வழிவகை செய்கிறது. இந்த வகை ஹார்மோன்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய பயிற்சிகளான யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். அதேபோல் நீரிழிவு நோயை சீராக்க உதவும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும்.
பாகற்காய் மற்றும் நெல்லிக்கனி சாறு
நெல்லிக்காயில் இன்சுலின் ஹார்மோனின் மீது செயல்படக் கூடிய குரோமியம் என்ற தாது சத்து உள்ளது மற்றும் உடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துகிறது. நீரிழிவு நோய்க்கான வீட்டு மருத்துவத்தில் ஒரு மிகச் சிறந்த மருந்து தான் பாகற்காய். இது அதிகமான மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இவை இரண்டையும் உட்கொள்வது சர்க்கரை நோய்க்கான ஒரு சிறந்த வீட்டு மருத்துவமாக இருக்கும்.
தண்ணீர் அருந்துதல்
உடலில் நீர் சத்து குறைவது இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர ஒரு முக்கிய காரணமாகும். சோடா அல்லது குளிர்பானங்களை விட தண்ணீர் அருந்துவது நல்லது. அதிகமான நீர் அருந்துவது நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடும் சிறந்த இயற்கை போராளியாக இருக்கும்.
மாவிலைகள்
மாவிலைகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் இன்சுலின் ஹார்மோனை அதிகப்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. 3-4 மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையில் பயோஆக்டிவ் கலவை உள்ளதால் சர்க்கரை நோயில் இருந்து நம்மை காக்க உதவுகிறது. இது இன்சுலின் செயல்பாட்டை தூண்டுதல் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
கற்றாழை
அலோவேரா என்றழைக்கப்படும் கற்றாழை செடியின் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு குணநலன்கள் உள்ளது. இதை மோரில் கலந்து பயன்படுத்தலாம்.
முருங்கைக்காய்
முருங்கைக்காயில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோய்க்கான சிறந்த வீட்டு மருத்துவம் இது.