ஆப்நகரம்

மூட்டு கீழ்வாதம் முதல் மாதவிடாய் வலி வரை போக்கும் மணத்தக்காளி... எப்படி பயன்படுத்தணும்...

ஒரே ஒரு கீரை நமக்கு கீல்வாதம் மற்றும் மாதவிடாய் பிடிப்பு இரண்டையும் போக்குகிறது. மணத்தக்காளி கீரையானது இந்த இரண்டு முக்கியமான நன்மைகளை அள்ளித் தருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கீரையை உணவில் சேர்த்து வரும் போது இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. வாங்க அது பற்றி தெரிந்து கொள்வோம்.

Samayam Tamil 14 Sep 2020, 1:56 pm
சில நேரங்களில் நமக்கு ஏற்படும் வலியை சமாளிப்பது என்பது கடினமான காரியமாக இருக்கலாம். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியாக இருக்கட்டும் வயதானவர்களுக்கு ஏற்படும் கீல் வாதம் போன்ற மூட்டு வலியாக இருக்கட்டும் வலிகளை குறைக்க நாம் வலி நிவாரணி மருந்துகளையே நாட வேண்டியிருக்கும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக மணத்தக்காளி இருக்கிறது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Samayam Tamil manathkkali will help you from arthritis to period cramps in tamil
மூட்டு கீழ்வாதம் முதல் மாதவிடாய் வலி வரை போக்கும் மணத்தக்காளி... எப்படி பயன்படுத்தணும்...


​மணத்தக்காளி

இந்த வலிகளுக்கு எல்லாம் நிவாரணம் அளிக்கும் விதமாக இருக்கும் மூலிகை தான் மணத்தக்காளி கீரை என்பது. இதில் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் பழங்கள் காணப்படும். இந்த மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வரும் போது கீல்வாத பிரச்சனை போன்ற வலிகளுக்கு நிவாரணம் காண முடியும். இது இயற்கையாகவே ஒரு மிகச்சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

​நோயெதிர்ப்பு ஆற்றல்

மணத்தக்காளி கீரையானது நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் படைத்தது. ஏனெனில் இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியை குறைக்கிறது. பாகிஸ்தான் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு என்ன கூறுகிறது என்றால் மணத்தக்காளி கீரை உங்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே இதன் கூடுதல் நன்மைகளை பற்றி இங்கே அறிவோம்

அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை சரிசெய்யும் உணவுகள் (ஆண், பெண் இருவருக்கும்)

​உடல் வலி

இது உடல் வலி மற்றும் மாதவிடாய் பிடிப்புகளை களைகிறது . பெண்கள் பொதுவாக மாதந்தோறும் மாதவிடாய் பிடிப்புகளால் அல்லல்படுவது உண்டு. மணத்தக்காளி கீரையானது ஆன்டிபைரிட்டிக் ஏஜெண்ட் ஆக செயல்படுகிறது இது சிறந்த வலி நிவாரணி ஆகும். இது வலி மிகுந்த பகுதியை குறி வைத்து நிவாரணம் அளிக்கிறது.

இது வயிற்று வலிக்கும் உதவுகிறது. யாருக்காவது கீல்வாத வலி உண்டானால் அவர்களுக்கும் நிவாரணம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

​மஞ்சள் காமாலை தடுக்கும் மணத்தக்காளி கீரை

இந்த தாவரத்தின் இலைகளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்திருக்கின்றன. கல்லீரலை வலுப்படுத்த உதவுகிறது. மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் பாதிப்பு ஏற்படுகையில் மணத்தக்காளி கீரை உங்களுக்கு அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. எனவே மஞ்சள் காமாலையில் இருந்து மீள இந்த தாவரத்தின் சாறு உங்களுக்கு உதவி செய்யும். இதனால் சீக்கிரமே மஞ்சள் காமாலையில் இருந்து மீள முடியும்.

மாதவிடாய் சமயத்துல வயித்துல ஊசி குத்தற மாதிரி பிடிச்சு இழுக்குதா? இத சாப்பிடுங்க வலி குறையும்...

​சரும பிரச்சனைகளை களைகிறது

இந்த மணத்தக்காளி கீரையில் ஆன்டி ஆக்ஸிடெண்ட், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது புதிய சரும செல்களை மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது. வயதான சருமத்தை போக்கி சருமம் இளமையாக இருக்க உதவுகிறது. தீக்காயங்கள், சரும கொதிப்பு போன்றவற்றை சரி செய்கிறது. இந்த தாவரத்தின் இலைகளை பேஸ்ட் செய்து முகப்பரு தொல்லை நீங்க பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தி வரலாம்.

​சிறுநீரக நோய்த்தொற்றை போக்குகிறது

மணத்தக்காளி கீரையில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது சிறுநீரக நோய்த்தொற்றை போக்குகிறது. இது பெண்ணுறுப்பு திரவ சுரப்பு, சிறுநீரக நோய்த்தொற்றை போக்குகிறது. பிறப்புறுப்பில் வளரும் பாக்டீரியா மற்றும் வைரஸை வெளியேற்ற உதவுகிறது.

பூண்டை எந்தெந்த பொருளோடு சேர்த்து சாப்பிட்டால் எடை வேகமாகக் குறையும்...

​மன அழுத்தம், பயம் களைகிறது

மணத்தக்காளி கீரையில் டையூரிடிக் அமிலம் உள்ளது. இது உங்களுக்கு மனரீதியாக ஏற்படும் பயம், மன அழுத்தம் இவற்றை களைந்து மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இது உடலின் ஆக்ஸினேற்ற அளவை அதிகரிக்கிறது. இதனால் அங்கு உடலில் ஏற்படும் அழுத்தங்களை கட்டுப்பாட்டில் வைக்கிறது. எனவே உங்களை ரிலாக்ஸ்ஸாக வைக்க நினைப்பவர்கள் மணத்தக்காளி கீரையை உங்க உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மணத்தக்காளி கீரையை சரியான அளவில் பயன்படுத்தி வரும் போது ஏராளமான நன்மைகளை நீங்கள் பெற முடியும். ஒருவேளை உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்துங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்