வறட்டு இருமல் என்பது சாதாரணமாக சரியாக கூடியது என்று உதாசினம் செய்ய முடியாது. சளிக்கு பிறகு இருமலாக மாறி கோழையுடன் வறட்சியும் சேர்ந்த அதீத பாடு படுத்தும். வறட்டு இருமல் நீண்ட நாட்களாக இருக்க கூடும். இருமலை வேகமாக குறைக்க இந்த அதிமதுர இலேகியம் உதவும். எப்படி தயாரிப்பது எப்படி எடுத்துகொள்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
அதிமதுரம் - 30 கிராம்
வாதுமைப்பிசின் - 20 கிராம்
வேலம் பிசின்- 20 கிராம்
பனங்கருப்பட்டி - 250 கிராம்
ஏலத்தூள் - கால் டீஸ்பூன்
சுக்குத்தூள் - கால் டீஸ்பூன்
பனங்கருப்பட்டியை சிறிதளவு நீர் விட்டு கொதிக்க விடவும். பனங்கருப்பட்டி கரைந்து கம்பி பதம் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பிறகு அதிமதுரம், வாதுமைப்பிசின், வேலம் பிசின் ( சிறிது நேரம் நீரில் ஊறவைத்து) மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கி மீண்டும் அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைத்து கிளறி எடுக்கவும். அல்வா பதம் வரும் போது இறக்கி விடவும்.
licorice : அதிமதுரத்தை எப்படி எடுப்பது? பக்கவிளைவுகள் என்ன? அளவாக எடுத்தால் என்ன நன்மை கிடைக்கும்?
அப்படியே வைத்தும் பயன்படுத்தலாம். அல்லது சிறு சிறு உருண்டையாக பிடித்து கண்ணாடி பாட்டிலில் வைக்கலாம். குழந்தைகளுக்கு அரை நெல்லிக்காய் அளவு அல்லது சுண்டைக்காய் அளவு உருண்டையாக பிடித்து வைக்கலாம். வளர்ந்த பிள்ளைகளுக்கு சிறு நெல்லி அளவும், பெரியவர்கள் நெல்லி அளவும் சாப்பிடலாம்.
எப்போது எப்படி சாப்பிடுவது?
தினமும் இரண்டு வேளை காலை உணவுக்கு பிறகு இரவு உணவுக்கு பிறகும் ஓர் உருண்டை எடுத்து வரவும். தொடர் வறட்டு இருமல் இருந்தால் மூன்று வேளை உணவுக்கு பிறகும் இதை சாப்பிடலாம். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இப்படியே அல்லது தேனில் தயாரித்தும் கொடுக்கலாம்.
இது உடலில் இருக்கும் கோழையை வெளியேற்றி இருமல் தீவிரத்தை கட்டுப்படுத்தி வேகமாக குணமாக்கவும் செய்யும்.
ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன
Cough Home Remdies : இருமலை சட்டென்று குறைக்கும் மிகச்சிறந்த பானங்கள்! எல்லா வயதினருக்கும் ஏற்றது!
அதிமதுர நன்மைகள்
உடலில் வாதத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வர அதிமதுரம் உதவும். மழைக்காலத்தில் அதிமதுரம், சுக்கு, மிளகு,திப்பிலி, இலவங்கம் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். வறட்டு இருமல் இருந்தால் கஷாயம் இல்லாமல் அதிமதுர துண்டை வாயில் அடக்கி உமிழ்நீர் மென்று விழுங்கினால் வறட்டு இருமல் குணமாகும்.
வாதுமைப்பிசின் நன்மைகள்
பாதாம் பருப்பு அல்லது வாதுமை மரத்தின் பிசின் ஆனது உடல் பாதிப்புகளுக்கு நன்மை செய்யும். கோந்து போன்று இருக்கும் இதை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து பயன்படுத்தவும். இது உடல் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
ஆரோக்கிய நன்மை அளிக்கும் இந்த இலேகியத்தை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் இல்லாதது.