இரத்தம் அசுத்தமாகக் காரணங்கள் என்னென்ன?
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள்
சுற்றுச்சூழல் மாசுக்கள்
ஜங்க் ஃபுட் அதிகமாக உண்ணுதல்
அதிகமான வேலைப்பளு மற்றும் இரவு நேரம் கழித்து சாப்பிடுதல்
குறைவான அளவு தண்ணீர் குடிப்பது
இன்ஸோமினியா (தூக்கமின்மை)
உடல் பருமன்
மன அழுத்தம்
ஹார்மோன் மாற்றங்கள்
வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் நோய்கள் போன்றவை இரத்தம் நஞ்சாக காரணமாகின்றன.
உண்டாகும் நோய்கள்
நம்முடைய உடலில் ரத்தம் அசுத்தமாவதால் சில நோய்கள் உண்டாகின்றன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
அழற்சி சம்பந்தமான நோய்கள்
வயிற்று, குடல் பிரச்சனைகள்
ஹார்மோன்களில் மாற்றம்
நினைவாற்றல் இழப்பு
உறுப்புகள் செயலிழப்பு
ஆட்டோஇம்பினியூ நோய்கள்
சரும நோய்கள்
புற்றுநோய்கள்
போன்ற நோய்கள் உண்டாகின்றன.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகள்
லெமன் ஜூஸ்
லெமன் ஜூஸ் நம்முடைய இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு செரிமான பாதையை சுத்தப்படுத்தவும் உதவி செய்கிறது. லெமன் ஜூஸ் ஒரு அமிலத்தன்மை வாய்ந்தது. இதில் சிட்ரிக் அமிலம் உள்ளது. எனவே இந்த அமிலத்தன்மை மூலம் இரத்தத்தின் pH அளவை அதனால் மாற்ற முடியும். இதனால் பல வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அல்கலைன் சூழலில் வாழ முடியாது. எனவே இரத்தம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற தொற்றுக்கள் இல்லாமல் சுத்தமாகி விடுகிறது.
பயன்படுத்தும் முறை
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற காலையில் வெறும் வயிற்றில் 1/2 எலுமிச்சை பழத்தை சூடான நீரில் கலந்து குடியுங்கள்.
ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா
ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுக்களை குறைக்கிறது. கருப்பு இரத்தம் உண்டாவதற்கு இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் தான் காரணம். எனவே அது போன்ற யூரிக் அமிலம் போன்ற நச்சுக்களை இரத்தத்தில் இருந்து வெளியேற்றுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா ஒரு வெறும் கிளாஸில் எடுத்து கலந்து கொள்ளுங்கள். நுரைக்க தொடங்கும். நுரைகள் முடிந்த பிறகு அதனுடன் தண்ணீர் கலந்து உடனே குடியுங்கள். இந்த கலவை pH அளவை சமநிலையாக்குகிறது. அதே நேரத்தில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகிக் கொள்ளுங்கள்.
துளசி
துளிசியில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. எனவே துளசி சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தையும் சுத்நப்படுத்துகிறது. இந்த துளசி உங்க உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி விடும்.
பயன்படுத்தும் முறை
5 முதல் 6 துளசி இலைகளை நசுக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இல்லையென்றால் 8 துளசி இலைகளை சூடான நீரில் போட்டு துளசி டீ தயாரித்தும் குடிக்கலாம். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
மஞ்சள்
மஞ்சள் ஒரு சக்தி வாய்ந்த மசாலா பொருளாகும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு காயங்களை ஆற்றும் குணம் உடையது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் உடம்பில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போரிடுகிறது. மேலும் இரத்த அணுக்கள் உற்பத்தியாவதற்கும் மஞ்சளை ஆயுர்வேதத்தில் பயற்படுத்துகின்றனர்.
பயன்படுத்தும் முறை
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பவுடரை 1 கப் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்து வாருங்கள். இது கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதன் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கிறது.
நீர்
இரத்தம் சுத்தமாக மிக முக்கியமான பொருள் நீர் ஆகும். அதிகமான தண்ணீர் குடிப்பதே இரத்தத்தை சுத்தமாக வைப்பதற்கான மிகச்சிறந்த வழி. ஏனெனில் தண்ணீர் நம் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவி செய்கிறது. விட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சி நச்சுக்களை மட்டும் சிறுநீரின் வழியாக வெளியேற்ற உதவுகிறது
எனவே ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் வரை குடித்து வாருங்கள். கோடைகாலம் என்றால் தாகத்திற்கு ஏற்ப அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இதர உணவுகள்
ப்ளூபெர்ரி
இது இயற்கையாகவே இரத்தத்தை சுத்தம் செய்யும் பழமாகும். அதே மாதிரி இது கல்லீரல் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
பிராக்கோலி
பிரக்கோலியில் விட்டமின் சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதுவும் இரத்தத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
பீட்ரூட்
இதில் பீட்டலைன், நைட்ரேட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இதுவும் இரத்தத்தை சுத்தம் செய்ய பயன்படுகின்றன.
வெல்லம்.
வெல்லம் உடம்பில் இரத்தம் கட்டி இருந்தால் அதை போக்க பயன்படுகிறது. அதே மாதிரி இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தம் செய்ய பயன்படுகிறது.