சென்னை: செட்டிநாடு பக்கம் பிரபலமான வெள்ளைப் பணியாரம் செய்வது பற்றி பார்க்கலாம். காரம், இனிப்பு என விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்
வெள்ளை உளுந்தம் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பால் - கால் கப்
சீனி - ஒன்றரை தேக்கரண்டி
செய்முறை :
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளவும். அதிகம் பேருக்கு செய்ய வேண்டும் என்றால், கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களின் அளவையும் ஒரே விகிதத்தில் அதிகரித்துக் கொள்ளவும்.
அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக், மூழ்கும் அளவு தண்ணீரில் சுமார் ஒன்றரை மணிநேரம் ஊற வைக்கவும்.
அரிசி உளுந்து ஊறியதும், அதனுடன் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் மாவு மிருதுவாக இருக்கும்.
தற்போது, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சற்று ஏந்தலான கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் நேரடியாக ஊற்றவும். ஊற்றும்போது எண்ணெய் மேலே தெறிக்காதது போல் எச்சரிக்கையாக ஊற்றவும். மாவை ஊற்றியதும் எண்ணெய்யில் பொரிந்து அது பணியாரம்போல் உப்பி வரும். இரண்டு புறமும் வெந்தவுடன் எண்ணெய்யை வடித்து எடுத்துவிடவும். சிவக்க விடக்கூடாது.
இப்போது சுவையான செட்டிநாட்டு வெள்ளைப் பணியாரம் தயார். இதனை காரச் சட்னி, வெங்காயம் அல்லது தக்காளிச் சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதே அப்பத்தினை சர்க்கரை பாகில் ஊறவிட்டும், தேங்காய்ப் பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்
வெள்ளை உளுந்தம் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பால் - கால் கப்
சீனி - ஒன்றரை தேக்கரண்டி
செய்முறை :
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளவும். அதிகம் பேருக்கு செய்ய வேண்டும் என்றால், கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களின் அளவையும் ஒரே விகிதத்தில் அதிகரித்துக் கொள்ளவும்.
அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக், மூழ்கும் அளவு தண்ணீரில் சுமார் ஒன்றரை மணிநேரம் ஊற வைக்கவும்.
அரிசி உளுந்து ஊறியதும், அதனுடன் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் மாவு மிருதுவாக இருக்கும்.
தற்போது, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சற்று ஏந்தலான கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் நேரடியாக ஊற்றவும். ஊற்றும்போது எண்ணெய் மேலே தெறிக்காதது போல் எச்சரிக்கையாக ஊற்றவும். மாவை ஊற்றியதும் எண்ணெய்யில் பொரிந்து அது பணியாரம்போல் உப்பி வரும். இரண்டு புறமும் வெந்தவுடன் எண்ணெய்யை வடித்து எடுத்துவிடவும். சிவக்க விடக்கூடாது.
இப்போது சுவையான செட்டிநாட்டு வெள்ளைப் பணியாரம் தயார். இதனை காரச் சட்னி, வெங்காயம் அல்லது தக்காளிச் சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதே அப்பத்தினை சர்க்கரை பாகில் ஊறவிட்டும், தேங்காய்ப் பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.