ஆப்நகரம்

மாதவிடாய் வலிக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்!

மாதவிடாய் வரும்போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். அந்த சமயங்களில் முருங்கை கீரையில் சூப் செய்து குடித்தால், மாதவிடாய் வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.

Samayam Tamil 2 Mar 2019, 2:26 pm

ஹைலைட்ஸ்:

  • மாதவிடாய் வரும்போது வலி வருவது இயல்புதான் என்றாலும், பல பெண்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும்.
  • அந்த சமயங்களில் முருங்கை கீரையில் சூப் செய்து குடித்தால், மாதவிடாய் வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மாதவிடாய் வலிக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்!
மாதவிடாய் வலிக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்!
மாதவிடாய் வரும்போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். இது இயல்புதான் என்றாலும் பல பெண்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். அந்த சமயங்களில் முருங்கை கீரையில் சூப் செய்து குடித்தால், மாதவிடாய் வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.
தேவையானவை: முருங்கைக்கீரை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பூண்டு - ஒரு பல், மிளகு - கால் டீஸ்பூன், தனியா, சீரகம் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியை நறுக்கவும். மிளகு, சீரகம், தனியாவை பொடி செய்து கொள்ளவும்.

கடாயில் கீரை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பை 'சிம்’மில் வைத்து அரைத்த விழுதுடன் மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் முருங்கைக்கீரை சூப் தயார்!

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்