தக்காளி தோசை
கலர் என்றதுமே எல்லோருக்கும் சிவப்பு நிறம் நினைவுக்கு வரும். எப்போதும் தோசையா என்று கேட்கும் குழந்தைகள் இந்த தக்காளி தோசையைக் கண்டதும் குதூகலித்து சாப்பிடுவார்கள்.
ஒரு தம்ளர் மாவுக்கு 2 தக்காளி வீதம் அளவு வைத்து கொள்ளுங்கள். நன்றாக பழுத்த தக்காளியை மிக்ஸியில் மைய அரைத்து மாவுடன் சேர்த்து தேவையான உப்பு, (தண்ணீர் தேவையிருந்தால் மட் டும் சேர்த்து கலக்குங்கள்.அரைமணி நேரம் கழித்து கனமான தோசைக்கல்லில் வெங்காயம் தடவி தோசையாக வார்த்து எடுங்கள்.
குறிப்பு
தோசை சற்று காரமாக வேண்டுமென்றால் தக்காளியுடன் வரமிளகாய் சேர்த்து அரைக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரத்தால் சாப்பிட அடம் பிடிப்பார்கள்.
கடுகு, உ.பருப்பு. க.பருப்பு வரமிளகாய் தாளித்து கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவியும் தோசை வார்க்கலாம். இவையும் அருமையாக இருக்கும்.புளிப்பும் சற்று காரமும் நிறைந்த இந்த தோசை வித்தியாசமான சுவையியில் நன்றாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய்ச்சட்னி சூப் பர் காம்பினேஷன்.
க்ரீன் தோசை
ஒரு தம்ளர் தோசை மாவுக்கு கால் கப் புதினா இலைகளை சுத்தம் செய்து ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உப்பு, தேவையான நீர் சேர்த்து கலக்கவும். வாணலியில் கடுகு, உ. பருப்பு தாளித்து கொட்டி அரை மணி நேரம் கழித்து தோசையாக வார்க்கலாம்.
இதே போன்று கறிவேப்பிலை தழையும் மிக்ஸியில் அரைத்து சற்று கூடுதலாக காரம் சேர்த்து தாளி ப்பு பொருள்களும் சேர்த்து தோசையாக வார்க்கலாம். சுவையான மணத்துடன் அருமையாக இருக் கும்.
குறிப்பு
மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த புதினா தோசையை அவ்வபோது செய்து கொடுத்தால் செரிமானப் பிரச்சனை அண்டாமல் இருக்கும். பசி உணர்வை அதிகரிக்க செய்யும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடலுக்கு ஆரோக்கியமான புதினா தோசைக்கு தொட்டு கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும். மிகவும் இலேசான கசப்பு சுவை இருந்தாலும் குழந்தைகள் மறுக்காமல் சாப்பிடுவார்கள்.
காய்கறி தோசை
காய்கறிகளைக் குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது என்று தவிப்பவர்களுக்கு கை கொடுக்கும் அருமையான உணவு முறை இது. குழந்தைகளுக்கு 7 ஆம் மாதம் முதலே காய்கறி சாறு கொடுக்க தொடங்கிவிடுகிறோம். எனினும் வளர்ந்த பிறகு குழந்தைகள் காய்கறி சாப்பிட அடம் பிடிக்கிறார் கள்.
காய்கறியை எப்படி கொடுத்தாலும் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படியாக தோசையில் கலந்து கொடுத்தால் வேண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.
தேவையான பொருள்கள்
கேரட் - 1 ,
உருளை, பீன்ஸ், கோஸ் - 1 கப் (அனைத்தையும் சுத்தம் செய்து மிகப் பொடியாக நறுக்கி கொள்ளவும்)
வெங்காயம்- கால் கப்
கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை- தேவைக்கு
தாளிக்க- கடுகு, உ.பருப்பு, கபருப்பு தேவைக்கு
தோசை மாவு- 3 கப்
உப்பு, எண்ணெய்- தேவைக்கு
செய்முறை
கேரட்டை தோல் சீவி துருவி கொள்ளவும். அல்லது பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருள்கள் சேர்த்து வெங்காயம் காய்கறி சேர்த்து வதக்கி மாவில் கலக் கவும். கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து தோசையாக வார்த்தெடுக்கவும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறிய சிறிய தோசைகளாக வார்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காய்கறி களையும் மறுக்காமல் சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளிச் சட்னி, தேங்காய்ச் சட்னி அருமையாக இருக்கும்.
விதவிதமாய் ஆரோக்கியமாய் சமைக்க சத்தான பொருள்கள் கைகொடுக்கும்போது வெளி உணவை நாடவேண்டியதில்லை.