ஏனெனில் முதுகுப்புறத்தை தாங்கி பிடிக்கும் தசைகளின் மீதும் தசை நார்களின் மீதும் அதிக அழுத்தம் உண்டாவதால் இடுப்புவலி உபாதை அதிகரிக்கும். ஆனால் முறையான உணவு பழக்கம், சீரான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் போது இந்த உபாதைகள் குறைந்து இருக்கும். இதை சிறப்பாக செய்துவந்தவர்கள் நம் முன்னோர்கள். கர்ப்பிணிகளுக்கு 7 ஆம் மாத துவக்கத்தில் கொடுக்கப்படும் சுக்கு நீர் குறித்தும் அவை தரும் பயன்கள் குறித்தும் பார்க்கலாம்.
கர்ப்பக்காலத்தின் 7 ஆம் மாதம்
கர்ப்பக்காலத்தை மூன்று கட்டங்களாக பிரித்திருக்கிறார்கள். முதல் மூன்று மாதங்கள், அடுத்த மூன்று மாதங்கள், இறுதி மூன்று மாதங்களான இவை முதல் ட்ரைமெஸ்டர், இரண்டாம் ட்ரைமெஸ்டர், மூன்றாம் ட்ரைமெஸ்டர் என்று அழைக்கிறார்கள்.
பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்கலாமா? என்ன பாதிப்பு உண்டாகும்!
ஒவ்வொரு ட்ரைமெஸ்டர் காலங்களிலும் உடலில் உண்டாகும் உபாதைகளும் மாறக்கூடும். அதை உணவு மூலமும் வாழ்க்கை முறையிலும் சரி செய்ய இயலும். கூடுதலாக இவை சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கவும் செய்யும். மூன்றாம் ட்ரைமெஸ்டரின் தொடக்க காலம் முதல் கர்ப்பிணிகள் மனதளவிலும் உடலளவிலும் பிரசவத்திற்கு தயாராக வேண்டும்.
அப்போது உண்டாகும் உடல் உபாதைகளை எதிர்கொள்ளும் வகையில் உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படியான ஒன்று தான் முன்னோர்களின் கை வைத்தியத்தில் தினமும் குடிக்க தரும் சுக்கு நீர். இதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சுக்கு நீர் தயாரிப்பு
நாட்டு மருந்துகடைகளில் சுக்கு கிடைக்கும். சுக்கை பொடியாக வாங்கி வைத்துகொள்ளலாம். சுக்கை அப்படியே வாங்கியும் பயன்படுத்தலாம்.
இரண்டு டம்ளர் நீரை கொதிக்க வைத்து சிறுதுண்டு சுக்கை நசுக்கி சேர்க்கவும். அவை கொதித்ததும் ஒரு டம்ளராக சுண்டும் அளவு கொதிக்கவைத்து இறக்கி பனைவெல்லம், சிட்டிகை ஏலத்தூள் கலந்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
தினமும் மாலை வேளையில் ஒரு டம்ளர் அளவு குடித்துவந்தால் போதுமானது. இதை பிரசவக்காலம் வரை குடித்துவரலாம். எந்தவிதமான பக்கவிளைவும் நேராது. இந்த சுக்கு நீரை குடிப்பதால் கர்ப்பிணி பெண்களின் உடலில் உண்டாகும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பிரசவக்காலத்தில் சுக்கு
முதல் முறை கருத்தரிக்கும் பெண்களுக்கு 7 ஆம் மாதம் முதலே பிரசவக்காலத்தை எளிமையாக்கும் வகையில் எலும்புகளை வலுவாக்கி தசைகளை தளர்த்தும் வகையில் ஊக்குவிக்க வேண்டும்.இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். இவை முதுகுவலி. மூட்டுவலி, கணுக்கால் வலி உண்டாக்க கூடும்.
இந்நிலையில் உடலில் வாயு சேர்ந்திருந்தால் அவை மூட்டுகளில் தேங்கி, உபாதையை உண்டாக்கும். இந்த வாயுவை கலைப்பதோடு மேற்கண்ட பிரச்சனைகளையும் தீர்க்க சுக்கு நீர் உதவுகிறது. கூடுதலாக சுக்கு எலும்பை பலப்படுத்துவதால் இடுப்பு எலும்பு வலுவாகவும் அதே நேரம் பிரசவக்காலத்தில் விரிவடையும் தன்மையயையும் எளிதாக்குகிறது.
கர்ப்பக்கால மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் பாதுகாக்கிறது. பிரசவக்காலத்தில் சிலருக்கு ஜன்னி என்னும் குளுமை கண்டுவிடக்கூடும். அப்படியான உடல் குளுமையை இல்லாமல் உடலை சீரான வெப்பநிலையில் கொண்டுவருகீறது. செரிமானப் பிரச்சனைகளை இல்லாமல் செய்துவிடுகிறது.
பிரசவத்துக்கு பிறகு
பிரசவத்துக்குப் பிறகு தயாரிக்கும் பிரசவ லேகியத்தில் சுக்குவின் பங்கு அவசியமானது. கர்ப்பக்காலத்தில் சுக்கு நீர் குடித்துவருவதால் பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு இளைப்பு, ஆஸ்னோபிலியா, ஆஸ்துமா நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களுக்கு உண்டாகும் உடல் அசதியை குறைக்கும். பிரசவ காலத்தில் அதிகப்படியாக உடல் இழந்த பலவீனத்தை போக்கும். உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கும். சில பெண்களுக்கு பிரசவக்காலம் முடிந்ததும் ஜன்னி உண்டாக கூடும். சற்று அசந்தால் ஆளையே கொல்லும் அளவுக்கு இவை பாதிப்பை உண்டாக்கிவிடும்.
வளரும் பிள்ளைக்கு மூக்கடைப்பு பிரச்சனையா, இந்த 5 விஷயம் பண்ணுங்க சீக்கிரமே சரியாகும்!
அந்த காலத்தில் மருத்துவச்சிகளை கொண்டு பிரசவம் பார்த்ததால் பிரசவத்துக்கு உடலை தயார் செய்யும் போது இப்படி ஜன்னி உருவாவதையும் மனதில் கொண்டு தான் சுக்கு நீர் குடிப்பதை வழக்கமாக்கினார்கள். இவை கூடுதலாக சுகப்பிரசவத்தையும் ஊக்குவிக்கும் என்பது தனி சிறப்பு.
உடல் அதிக சூட்டை உண்டாக்கிவிடுமோ என்று கவலை கொள்ள வேண்டியதில்லை. சுக்கு உடன் பனைவெல்லம் சேர்ப்பதால் இவை உடலில் அதிக உஷ்ணத்தை உண்டாக்காது.