ஆப்நகரம்

karppa arikurigal : கண்டிப்பா கர்ப்பம் தான்.. உறுதி செய்யும் 8 அறிகுறிகள்..!

கர்ப்பத்தை எதிர்நோக்கும் போது மாதவிடாய் தள்ளிபோனாலே அது கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்குமோ என்று நினைத்து தவித்துவிடுவார்கள். அன்று முதல் கர்ப்பத்தை உறுதி செய்யும் வரை மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். ஆனால் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகள் தென்படும். அப்படியான அறிகுறிகள் என்ன என்பதை தான் இங்கு பார்க்க போகிறோம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 15 May 2024, 1:08 pm
கர்ப்பமாவதன் அறிகுறியாக வாந்தியும் மயக்கமும் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் இவை எல்லாம் கர்ப்பத்தை உறுதி செய்தபிறகு வரக்கூடியவை. ஆனால் கர்ப்பம் தொடக்கத்திலேயே பல அறிகுறிகளும் வெளிப்பட்டுவிடும். சற்று கூர்ந்து கவனித்தால் முன்கூட்டியே கர்ப்பத்தின் அறிகுறிகளை கண்டு கொள்ள முடியும். அப்படியான அறிகுறிகளை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
Samayam Tamil early symptoms of pregnancy in tamil
karppa arikurigal : கண்டிப்பா கர்ப்பம் தான்.. உறுதி செய்யும் 8 அறிகுறிகள்..!


​மாதவிடாய் தள்ளிபோவது கர்ப்பத்தின் அறிகுறியா?​

முதலில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மாதவிடாய் சுழற்சி நாள்களில் மாற்றம் இல்லை என்றால் மாதவிடாய்க்கு பின்பு 14 முதல் 17 நாட்கள் வரை சினை முட்டை வெளியாகும் நாள். இந்நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கருத்தரித்தால் கர்ப்பப்பையின் உள்புறத்தில் நஞ்சுக்கொடி ஹெ.சி.ஜீ என்னும் கர்ப்பகால சுரப்பி சுரக்க தொடங்கும். இந்த சுரப்பிதான் இரத்தத்திலும், சிறுநீரிலும் வெளிப்படும். இதை கொண்டு தான் கருத்தரித்தலை உறுதி செய்கிறோம்.

மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த சுழற்சி வராமல் அதை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அல்லது முந்தைய மாதவிடாய் சுழற்சியிலிருந்து ஏழாம் வாரத்தில் இந்த சுரப்பி அதிகம் சுரக்க தொடங்கும். அப்போது பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்வார்கள் அதனால் தான் மாதவிடாய் காலத்தை சரியாக நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

​கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும்​

வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். பொதுவாக உணவு சமைக்கும் போதும், இலேசாக வெளிப்படும் நறுமணமும் கூட அதிகமாக உணர்வீர்கள். சமையலில் பருப்பு வேகவைக்கும் மணம் கூட சற்று கூடுதலாக வெளிப்படும்.

சில வாசனைகள் உங்களுக்கு பிடித்தாலும் சில வாசனைகள் உங்களை குமட்டலுக்கும் உள்ளாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும்

வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். பொதுவாக உணவு சமைக்கும் போதும், இலேசாக வெளிப்படும் நறுமணமும் கூட அதிகமாக உணர்வீர்கள். சமையலில் பருப்பு வேகவைக்கும் மணம் கூட சற்று கூடுதலாக வெளிப்படும்.

சில வாசனைகள் உங்களுக்கு பிடித்தாலும் சில வாசனைகள் உங்களை குமட்டலுக்கும் உள்ளாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

​கர்ப்பத்தின் தொடக்கத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாக இருக்குமா?​

தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறியே. பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும். அதற்கேற்ப சிறுநீரும் அதிகமாக வெளியேறும்.
கர்ப்பக்காலத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் கருத்தருத்தலை உணர்த்தும் அறிகுறிகளில் இந்த அறிகுறியும் ஒன்று என்பதால் உங்கள் மாதவிடாய் காலத்தை இதனுடன் தொடர்பு படுத்தி இந்த அறிகுறியை கவனியுங்கள்.

​கர்ப்பத்தின் ஆரம்பத்தில் சோர்வு அதிகம் இருக்குமா?​

எப்போதுதான் சோர்வு இல்லாமல் இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு உடல் பலவீனத்தை கொண்டிருக்கும். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக சோர்வு ஆட்கொண்டால் அதற்கு காரணம் கருத்தரித்தல் என்று சொல்லலாம்.

உடலில் உண்டாகியிருக்கும் புதிய உயிருக்காக ஹார்மோன்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இந்த சோர்வு வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே இருக்கும். மாதவிடாய் வரக்கூடிய நாள் நெருங்கும் போது இந்த சோர்வு ஆட்கொண்டால் அதிலும் தொடர்ந்து இருந்தால் கருத்தரித்தலுக்கான அறிகுறிதான் என்று சொல்லலாம்.

கர்ப்பமாக இருந்தால் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்குமா?

வழக்கத்தை விட உடல் வெப்பநிலை சூடாக இருக்கும். உடலில் உண்டாகும் அசெளகரியத்தால் காய்ச்சல் போன்று நினைக்கலாம். அதற்கேற்ப உடல் ஓய்வு கேட்டு கெஞ்சும்.


இரவு முழுவதும் தூங்கி காலையில் ஓய்வு எடுத்தாலும் கூட காலையில் எழுந்ததும் உங்களை மீண்டும் படுக்கையில் கிடக்க சொல்லும். ஆனால் இவையெல்லாமே காய்ச்சலுக்கான அறிகுறி அல்ல. கருத்தரித்தலுக்கான அறிகுறி தான் என்பதை தொடர்ந்து வரும் நாட்களில் உணர்ந்துகொள்வீர்கள்.

​பசியின்மை இருந்தால் அது கருவுற்ற அறிகுறிகளா?​

நாள் முழுவதும் பசி உணர்வு மிகுந்திருக்கும். அதே நேரம் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர பிற உணவுகள் மீதும் மோகம் அதிகரிக்கும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

இப்படி உணவின் பிடிப்பிலும் ஒரு மாற்றம் உண்டாகும். அதே நேரம் எப்படி சமைத்தாலும் சாப்பிட முடியாது. இந்த அறிகுறிகள் எல்லாமே நீங்கள் கருத்தரித்தலுக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதையே உணர்த்தும்.

கருவுறும் போது வயிற்றில் அசெளகரியம் இருக்குமா?

வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர்வீர்கள். இது உங்கள் அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். ஏனெனில் கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர்வீர்கள்.

இந்த அறிகுறிகள் கருத்தரித்த அனைவருக்கும் உண்டு. ஆனால் வெகு விரைவிலேயே இந்த அறிகுறிகளை மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.

அதை உணர்த்தும் அறிகுறிகளை தான் இங்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த அறிகுறிகள் தீவிரமாகும் வரை பலரும் இந்த அறிகுறிகளை கவனிப்பதில்லை. அதே நேரம் இந்த அறிகுறிகளை அறிந்ததும் நீங்களாக முடிவெடுக்கவும் செய்யாமல் மருத்துவரை அணுகி கருவின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து பரிசோதனை செய்வதும் மிகவும் முக்கியம்.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்