ஆப்நகரம்

கரீனா கபூர் எழுதிய “பிரக்னன்சி பைபிள்” புத்தகம்... கர்ப்பிணிகள் ஏன் கட்டாயம் படிக்க வேண்டும்?

கரீனா கபூர் கர்ப்பமாக இருந்தபோது தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்தும், கர்ப்ப கால சவால்கள் குறித்தும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்துக்கு `பிரக்னன்சி பைபிள்' என்றும் பெயரிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தை ஏன் தாய்மார்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 17 Aug 2021, 5:18 pm
கர்ப்பம் அமைவது மற்றும் தாயாக மாறுவது போன்றவற்றுக்கு ஆதரவாகவும், புத்துணர்ச்சியூட்டும் விதமாகவும் உள்ள புத்தகம் என்றால் அது இந்த பிரக்னன்சி பைபிள் ஆகத் தான் இருக்கும். உண்மையில் இந்த புத்தகம் ஒவ்வொரு தாயும் படிக்க வேண்டிய புத்தகம் ஆகும்.
Samayam Tamil kareena kapoor khans pregnancy bible is a must read for all moms to be
கரீனா கபூர் எழுதிய “பிரக்னன்சி பைபிள்” புத்தகம்... கர்ப்பிணிகள் ஏன் கட்டாயம் படிக்க வேண்டும்?


​பிரக்னன்சி பைபிள்

பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்துள்ளார். நடிகை கரீனா கபூர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். கர்ப்பத்தின் அனுபவம் குறித்தும், தனது சவால்களைப் பற்றியும் தனது புத்தகத்தில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த புத்தகத்தில் குழந்தை எதிர்பார்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ஆரோக்கியமாக இருப்பது பற்றிய சில குறிப்புகளைக் கொடுத்துள்ளார்.

​கர்ப்ப கால யோகா

கர்ப்ப காலத்தில் யோகா செய்வது, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதன் நன்மைகள் பற்றியும் கூறியுள்ளார். இந்தப் புத்தகத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. இந்த புத்தகத்தின் மூலம், கர்ப்பமாக இருப்பது சிலருக்கு பயமாக இருந்தாலும், ஆச்சரியமாக இருப்பதாகவும், உலகின் சிறந்த உணர்வுகளில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

​பாலூட்டுவதில் ஏற்படும் பிரச்சினைகள்

கர்ப்ப காலத்தில் உங்களின் முதல் மூன்று மாதங்கள் எப்படி இருக்க வேண்டும், தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள், எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து, கர்ப்பிணிகளுக்கான ஷாப்பிங் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கான ஷாப்பிங் பட்டியல் பற்றிய பயனுள்ள தகவல்களை இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் பெறலாம்.

​கரீனாவின் கர்ப்ப கால அனுபவம்

கரீனா கபூர் இந்த புத்தகத்தை தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியுள்ள பதிவில், நான் இந்த புத்தகத்தை எழுத ஒப்புக்கொண்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், அது இங்கே நடந்து விட்டது. குழந்தையை எதிர்பார்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் தனித்துவமான அனுபவங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஒற்றுமைகள் உள்ளன. இந்த புத்தகத்தில், நான் எனது அனுபவங்களையும், கற்றல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். இது தாய்மையை நோக்கிய உங்களின் பயணத்தில் ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். .

என் இரு குழந்தைகளையும் சுமந்தது தான் என் வாழ்வின் மிகச் சிறப்பான நேரம். அந்தத் தருணங்களையும், நினைவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்