ஆப்நகரம்

கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் இருந்தா எந்த வாரத்தில் பிரசவம் ஆகும், எப்போது ஆபத்து?

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் கொண்டிருந்தால் பிரசவம் எப்போது நடக்கும், முன்கூட்டிய பிரசவம் அபாயம் ஏற்பட என்ன காரணங்கள், ஆபத்துக்கள் போன்றவற்றை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 17 Feb 2023, 3:41 pm
கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிரசவம் எந்த வாரத்தில் நடக்கும் என்பது குறித்த கேள்வி பலருக்கும் உண்டு. ஏனெனில் சர்க்கரை நோய் கொண்டிருக்கும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது பல சிக்கல்களை எதிர்கொள்ளலாம். சில நேரங்களில் தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில வாரங்களுக்கு முன்னதாகவே பிரசவம் பரிந்துரைக்கப்படும். அதோடு சுகப்பிரசவம் சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் சிசேரியன் பிரசவத்துக்கு மருத்துவர்களே கூட பரிந்துரைப்பார்கள். இது குறித்து தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.
Samayam Tamil when is the delivery week if you have gestational diabetes
கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் இருந்தா எந்த வாரத்தில் பிரசவம் ஆகும், எப்போது ஆபத்து?


கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் வந்தால் ஆபத்தானதா?

கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் வந்தால் அது உடலில் வேறு பல குறைபாட்டையும் உண்டு செய்துவிடும். அந்த வகையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் உபாதைகளாக சொல்லப்படுவது


  • பிரசவம் சுகப்பிரசவமாக இல்லாமல் சிசேரியன் பிரசவமாக மாறுவது
  • தூண்டப்பட்ட உழைப்பாக மாறுவது
  • உயர் இரத்த அழுத்தம்
  • அம்னோடிக் சாக் முறிவு
  • பிரசவத்துக்கு முந்தைய மற்றும் பிரசவத்துக்கு பிறகு இரத்தப்போக்கு
  • அதிகப்படியான இரத்தப்போக்கு
போன்றவை பாதிக்கப்பட்டதாக ஆய்வில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சை முறைகளின் அடிப்படையில் விளைவுகளில் உள்ள வேறுபாடுகள் குறித்து ஆய்வு இல்லை. அதே நேரம் சீரான மருத்துவ ஆலோசனை உள்ளவர்களுக்கு இந்த முடிவுகள் கணிசமாக மேம்படும்.

கர்ப்ப கால சர்க்கரை நோயால் பிரசவம் சிக்கலாகுமா?

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் இருந்தால் பிரசவம் கர்ப்பத்தின் இந்த வாரத்தில் உண்டாகலாம் என்பதற்கான ஆதாரம் எதிலும் இல்லை. அதனால் இது குறித்து நிபுணர்கள் துல்லியமாக வெளிப்படுத்தவில்லை. எனினும் சிக்கல் இல்லாத பெரும்பாலான பிரசவம் என்பது பொதுவான காலக்கெடுவுக்குள் நடக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் இருந்தால் அவர்கள் பிரசவக்காலம் இருந்தாலும் சி பிரிவு பிரசவம் உருவாக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருவுக்கு சர்க்கரையை கடத்துவதால் குழந்தை பெரியதாக வளரும். இதன் மூலம் சுகப்பிரசவம் சாத்தியமாகாமல் சிசேரியன் பிரசவம் சாத்தியமாகலாம்.

கர்ப்பிணிக்கு சர்க்கரை நோய் இருந்தால் குறைப்பிரசவம் உண்டாகுமா?

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் கொண்டிருந்தால் பலருக்கும் முழு கால கர்ப்பத்துக்கு காலம் இருந்தாலும் இந்த நிலை பல்வேறு சிக்கல்களை உண்டு செய்யலாம். இது குறைப்பிரசவத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு முன்கூட்டியே பிரசவம் செய்ய மருத்துவர் திட்டமிடலாம்.

பெரும்பாலும் கர்ப்பகால சர்க்கரை நோய் கொண்டிருந்தால் பிரசவம் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

கரு மேக்ரோசோமியா (macrosomia)

கரு மேக்ரோசோமியா என்பது ஒரு கருவின் எடை 9 பவுண்டுகள் மேல் அல்லது 4.1 கிலோகிராம்களுக்கு மேல் இருந்தால் சொல்லப்படும் ஒரு நிலை. வழக்கத்தை விட பெரிய குழந்தை வயிற்றில் இருந்தால் பெற்றெடுப்பது உடலில் அதிக அழுத்தத்தை உண்டு செய்யும். கர்ப்பகால சர்க்கரை நோய் கொண்டுள்ள பெண்கள் இந்த சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர்.

பிரசவத்துக்கு பிறகு கடுமையான இரத்தப்போக்கு உண்டாகலாம். பிறக்கும் போதும் கடுமையான சேதத்தை யோனி பகுதியில் உண்டு செய்யலாம். இந்நிலையில் கரு பெரிதாக இருந்தால் மருத்துவரே முன்கூட்டிய சிசேரியன் பிரசவத்தை ஆதரிப்பார். அதே நேரம் கருவால் தாயின் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தாத வரை கரு முழு காலம் வரை தொடர்ந்து கருவில் இருக்க மருத்துவர் பரிந்துரைப்பார்.

கர்ப்பிணிக்கு ப்ரீக்ளாம்ப்சியா (Preeclampsia)

இந்த ப்ரீக்ளாம்ப்சியா கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதால் வரக்கூடியது. ப்ரீக்ளாம்ப்சியா என்றும் அழைக்கப்படும் இந்நிலை கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் கொண்டுள்ள கர்ப்பிணிகளிடம் பொதுவானதும் கூட.



இயல்பாக உயர் இரத்த அழுத்தம் உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். இந்நிலையில் மருத்துவர் முன்கூட்டிய பிரசவத்தை பரிந்துரைப்பார்.

இந்நிலையில் கர்ப்பிணிக்கு
  • தலைவலி
  • வயிற்று வலி
  • குமட்டல்
  • வாந்தி
  • மூச்சுத்திணறல்
  • வீங்கிய கைகள் மற்றும் கால்கள் போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்கள் கர்ப்பத்தில் இந்த அறிகுறியை எதிர்கொள்ளும் போது தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் இருந்தால் எந்த வாரத்தில் பிரசவம் நடக்கும்?

பெரும்பாலான சூழலில் கர்ப்பகால நீரிழிவு நோயுடன் கூடிய ஆரம்ப கால பிரசவம் என்பது பாதுகாப்பானது. ஏனெனில் மேற்கண்ட மேக்ரோசோமியா மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா போன்ற சிக்கல்களுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக பிரசவம் அவசியமாகிறது. கர்ப்பகால சர்க்கரை நோய் இருக்கும் பெண்கள் 37 வாரங்கள் முழுமையாக கடத்தலாம். அதே நேரம் 40 வாரங்களுக்குள் பிரசவம் செய்வது பாதுகாப்பானது.

37 வாரங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளும் ஆரோக்கியமானவர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. கனடியன் ஆய்வு ஒன்றில் கர்ப்பகாலத்தில் 26 வாரங்களில் பிறந்த குழந்தைகள் 87% உயிர்பிழைத்ததாக ஆய்வு காட்டுகிறது.

அதே நேரம் கர்ப்ப சிக்கல்கள் அடிப்படையில் மருத்துவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட நீரிழிவு அல்லது வாஸ்குலர் சிக்கல்கள் கொண்டவர்களுக்கு 39 வாரங்களுக்கு முன்பு பிரசவம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் இருந்தால் அதை நிர்வகிக்க மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுவதன் மூலம் இதை நன்றாக கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியமான கர்ப்பகாலம், பிரசவக்காலத்தை உறுதி செய்யலாம்.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்