ஆணும் பெண்ணும்
உறவு என்பது ஆணையும் பெண்ணையும் வேறு உலகத்தில் மிதந்திடச் செய்யும் ஒரு சுகமான உறவு. காதல் செய்வதற்கு நேரம் காலம் கிடையாது தான். அதேபோல் மற்ற விஷயத்துக்கு, குறிப்பாக ஒருவர் மீது ஒருவர் இச்சை கொள்வதற்கு சரியான நேரம் எது என்று யாரிடமாவது கேட்க முடியுமா அப்படிக் கேட்டால் நம்மைப் பார்த்து சிரிக்கத் தான் செய்வார்கள். சிலரோ ராத்திரி என்பார்கள். சிலர் இதற்கெல்லாம் ஏது நேரம் காலம் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கும் சில நேரங்கள் உண்டு. அதற்கான அறிவியல் காரணங்களும் உண்டு.
ஆண்கள் எந்த நேரத்தில்?
பொதுவாக ஆண்களுக்கு அதிகாலைப் பொழுதிலும் பெண்களுக்கு நள்ளிரவு நேரங்களிலும் தான் அதிக மோகம் ஏற்படும் என்று சொல்வார்கள். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் வாரத்தின் ஒரு சில தினங்களில் மட்டும் பெண்களுக்கு மோகத்தின் அளவு அதிகரிக்குமாம். அப்படி ஒரு ஆய்வு ஒன்று மேற்கொள்ளக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் எந்தெந்த நாட்களில் பெண்களுக்கு மோகம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அது எந்தெந்த நாட்கள், எந்த நேரம் என்பது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
ஆய்வு முடிவு?
இதுகுறித்து அமெரிக்காவில் ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதில் குறிப்பாக, பெண்களிடம் அவர்களுடைய உடலுறுவு குறித்த அனுபவங்கள் பற்றியும் அவர்களுக்கு ரொமாண்டிக் மன நிலை அதிகமாக இருக்கும் சமயங்கள் குறித்தும் கேள்விக்ள கேட்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில் பெண்களுக்கு எப்போதெல்லாம் உடலுறவு குறித்த எண்ணங்கள் தோன்றுகின்றன, எந்த சமயங்களில் உச்சத்தை எட்டுகிறார்கள் போன்ற பல கேள்விகளுக்கான விடை கிடைத்திருக்கிறது.
எந்த நேரத்தில்?
எந்த கிழமை, என்ன நேரம்னு உங்களுக்கு இப்ப உடனே தெரிஞ்சிக்கணும் அவ்வளவு தானே!. இருங்க. சனிக்கிழமை நாளன்று நள்ளரவில் தான் பெண்களுக்கு மிக அதிகமாக மோக எண்ணங்கள் உண்டாகுமாம். அது என்ன மற்ற நாட்களை விட சனிக்கிழமை என்று நீங்கள் கேட்கலாம். வாரத்தின் மற்ற நாட்களில் பெண்களுக்கோ அவர்களுடைய கணவருக்கோ வேலைப்பளு அதிகமாக இருந்தால் அந்த மன உளைச்சலே அவர்களுக்கு அதிகமாக இருக்கும். அதனால் மனமும் உடலும் ஓய்வை மட்டும் தான் தேடும். அது போன்ற சமயங்களில் பெண்கள் மற்ற எதையும் பற்றி யோசிப்பதே இல்லையாம்.
சனிக்கிழமை...
சனிக்கிழமை இரவு என்பது பெண்களுக்கு நிம்மதியான நேரம். கணவருக்கோ இவர்களுக்கோ இது விடுமுறை நாள். அடுத்த நாள் வேகமாக எழுந்து வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயமும் மன உளைச்சலும் இல்லை. அந்த மன நிம்மதி அவர்களுடைய ஹார்மோனைத் தூண்டுமாம். அந்த மகிழ்ச்சியே அவர்களுக்கு உறவில் அதிக ஈடுபாட்டை வரவழைக்குமாம். அதனால் சனிக்கிழமை நாட்களில் தான் வழக்கமாக நாட்களை விடவுமு் அதிக இன்பத்தையும் அடைகிறார்களாம்.