ஆனால் இங்கு குழந்தை பெற்ற பின் தன்னுடைய கணவனுக்குத் தன்மேல் இருந்த ஈர்ப்பு குறைந்துவிட்டதாக ஒரு பெண்மணி வருத்தப்படுகிறார். அதற்கு நம்முடைய மனநல ஆலோசகர் தரும் பதில் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
கேள்வி
எனக்கு குழந்தை பிறந்த பிறகு எனக்கும் என கணவருக்கும் இருந்த உடல் ரீதியான நெருக்கம் குறைந்துவிட்டது. நான் எனது குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்தில் உடலுறவு வேண்டாம் என அவர் கூறி வந்தார். ஆனால் தற்சமயம் நான் குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும் அவர் உடலுறவு கொள்ளாமல் இருப்பதற்கு காரணங்களை தேடுகிறார். இது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஒருவேளை எனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதா என எனக்கு தோன்றுகிறது.
பதில்:
உடல் ரீதியான நெருக்கம் என்பது முக்கியமான விஷயமாகும். ஒரு திருமண வாழ்க்கையின் முக்கிய அங்கமாக அது உள்ளது. மேலும் இது ஒரு உயிரியல் தேவையும் கூட. இருப்பினும் அது இணையின் தேவை அளவை பொறுத்து மாறுப்படலாம். உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் உடல் ரீதியான தொடர்பு இல்லையென்று தெரிகிறது.
இது உங்களுக்கு மிகவும் வெறுப்பாக இருக்கும். தாய்பால் கொடுக்கும் காலத்தில் அவர் அது சரியில்லை என நினைத்தார். ஆனால் இப்போது தாய் பால் கொடுப்பதை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள். ஆனாலும் உடலுறவு கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்களை அவர் கண்டறிந்த வண்ணம் இருக்கிறார். எனவே இது குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடம் பேசியே ஆக வேண்டும். அவருக்கு சில உணர்ச்சிகரமான பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் திருமண ஆலோசகரை அணுகுவது நல்லது.
நீங்கள் அவருடன் பேசுவதும் அவருடைய மனதில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளும் வரை உங்களால் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. நீங்கள் இதுக்குறித்து என்ன உணர்கிறீர்கள் மற்றும் அவர் என்ன உணர்கிறார் என்பது குறித்து இருவரும் வெளிப்படையாக பேசிக்கொள்வது நல்லது. அவருடன் நீங்கள் ஒத்துழைக்கலாம். இந்த உறவுகளுக்கு இடையே உள்ள விரிசலை கடக்க இருவரும் முயற்சி செய்யலாம்.
கேள்வி
எனக்கு குழந்தை பிறந்த பிறகு எனக்கும் என கணவருக்கும் இருந்த உடல் ரீதியான நெருக்கம் குறைந்துவிட்டது. நான் எனது குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்தில் உடலுறவு வேண்டாம் என அவர் கூறி வந்தார். ஆனால் தற்சமயம் நான் குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும் அவர் உடலுறவு கொள்ளாமல் இருப்பதற்கு காரணங்களை தேடுகிறார். இது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஒருவேளை எனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதா என எனக்கு தோன்றுகிறது.
பதில்:
உடல் ரீதியான நெருக்கம் என்பது முக்கியமான விஷயமாகும். ஒரு திருமண வாழ்க்கையின் முக்கிய அங்கமாக அது உள்ளது. மேலும் இது ஒரு உயிரியல் தேவையும் கூட. இருப்பினும் அது இணையின் தேவை அளவை பொறுத்து மாறுப்படலாம். உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் உடல் ரீதியான தொடர்பு இல்லையென்று தெரிகிறது.
இது உங்களுக்கு மிகவும் வெறுப்பாக இருக்கும். தாய்பால் கொடுக்கும் காலத்தில் அவர் அது சரியில்லை என நினைத்தார். ஆனால் இப்போது தாய் பால் கொடுப்பதை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள். ஆனாலும் உடலுறவு கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்களை அவர் கண்டறிந்த வண்ணம் இருக்கிறார். எனவே இது குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடம் பேசியே ஆக வேண்டும். அவருக்கு சில உணர்ச்சிகரமான பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் திருமண ஆலோசகரை அணுகுவது நல்லது.
நீங்கள் அவருடன் பேசுவதும் அவருடைய மனதில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளும் வரை உங்களால் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. நீங்கள் இதுக்குறித்து என்ன உணர்கிறீர்கள் மற்றும் அவர் என்ன உணர்கிறார் என்பது குறித்து இருவரும் வெளிப்படையாக பேசிக்கொள்வது நல்லது. அவருடன் நீங்கள் ஒத்துழைக்கலாம். இந்த உறவுகளுக்கு இடையே உள்ள விரிசலை கடக்க இருவரும் முயற்சி செய்யலாம்.