ஆப்நகரம்

திருமணத்துக்கு பின் மீண்டும் காதலா? மீள்வது எப்படி?

திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகிற பொழுது, மனம் அதை விட்டு வெளியே தள்ளி இருக்கச் சொல்லும். அந்த சமயங்களில் கிடைக்கும் அரவணைப்பு காதலாக மாற வாய்ப்புண்டு. அப்படி திருமணத்துக்கு பின் ஏற்படுகின்ற தகாத உறவில் இருந்து எப்படி வெளியேறலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 23 Jun 2020, 7:13 pm
சிலர் திருமணத்திற்குப் பின்பு தகாத உறவைத் தெரிந்தோ தெரியாமலோ வைத்துக் கொள்வார்கள். சிலசமயம் அதுவாகவே சூழ்நிலைகள் காரணமாக அமைந்துவிடும். திருமணமான பின்பு நம் துணைக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் இது போன்ற உறவுகள் அமைந்து விடுகிறது.உணர்வுகளைப் பலசமயம் நம்மால் கட்டுப்படுத்த இயலவில்லை.வீட்டில் இருக்கும் சிறிய பிரச்சினைகளினால் மனது சோர்வடைந்து இருக்கும் போது வெளியே கிடைக்கும் ஒருசில சந்தோஷத்தில் ஆள் மனசு அலைபாய்கிறது.
Samayam Tamil struggling in love after marriage what you need to know
திருமணத்துக்கு பின் மீண்டும் காதலா? மீள்வது எப்படி?


இது போன்ற சமயங்களில் சில உறவுகள் கிடைக்கிறது. காலப்போக்கில் அது தகாது உறவாக மாறுகிறது. ஆரம்பக் காலத்தில் இது சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் போகப்போக இதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளே ஜாஸ்தி. சில சமயம் தங்களுடைய திருமண வாழ்க்கை முறிந்து போகும் நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள் ஒரு சிலர் இன்னும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

​மீண்டும் காதலா?

நாம் உறவு வைத்துக் கொள்பவர்கள் நல்லவராக இருந்தால் திருமண வாழ்க்கை முடிவதோடு நின்றுவிடும். இல்லை என்றால் பல பிரச்சினைகளை நாம் விலை கொடுத்து வாங்குவதாக அமையும். அப்படிப்பட்ட சூழலில் சிலநாள் நாம் அந்த உறவிலிருந்து விடுபட நினைப்போம். ஆனால் சூழல் நம்மை விடுதலை செய்யாது. உறவில் விழுவது சுலபமான காரியம், ஆனால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமான காரியம். நீங்கள் இதுபோன்ற ஒரு சூழ்நிலையிலிருந்தால் உறவிலிருந்து வெளியே வர நினைத்தால் இங்கே உங்களுக்கான சில வழிமுறைகள்.

​காரணம் கண்டறிதல்

பெரும்பாலான தகாத உறவுகளுக்குக் காரணமாக அமைவது திருமண வாழ்க்கை. இப்பொழுது உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளைக் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. உங்களின் பிரச்சினைகளை அல்லது உங்களின் தேவைகளைப் பற்றி உங்கள் துணையிடம் நிச்சயமாக நீங்கள் தெரிவிக்க வேண்டும். உங்களின் தகாத உறவைப் பற்றி உங்கள் துணையிடம் தெரிவித்து விடலாமா?

இது மிகவும் கடினமான காரியம். திருமணத்திற்குப் பின் ஏற்படும் உறவிலிருந்து வெளியே வர தங்களின் துணை உதவி நாடுவது மிகவும் கடினமான காரியம். ஆனால் உண்மையைத் துணையிடம் கூறி, தவறை ஒத்துக்கொண்டு இதிலிருந்து வெளியே வரத் துணையிடம் உதவி நாடுவது பல வகையில் உதவி செய்கிறது. சிலர் கோபம் கொண்டு பிரிந்து செல்லும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதற்கு முன்னரே நாம் நமது பிரச்சனைகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து, பின்பு உறவின் பிரச்சினையை கூறி அதிலிருந்து வெளியே வர உதவி செய்யுமாறு அழைக்கவும். இது ஒரு முறையாகும்.

​பேசாதீர்கள்...

ஒருமுறை உங்கள் மனதிற்குள் உங்களது தகாத உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டால், அவர்களுடனான தொடர்பை முற்றிலும் முறித்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி உரையாடல் அல்லது நேரில் செல்வது போன்ற எந்தவித உரையாடல்களையும் நிகழ்த்த வேண்டாம். உங்களின் முடிவை உங்கள் காதலி தெரிந்து கொள்ளுமாறு நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களிடம் இருந்து விலகுவதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் கடினமான காரியமாக இருந்தாலும் பலர் உங்கள் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்டு, உங்களிடம் இருந்து விலகிச் செல்ல வாய்ப்புகள் அதிகம்.

மேலும் பாதிக்கப்பட்ட துணை மற்றும் தவறு செய்தவர் இருவரும் தங்களின் கடமைகளைப் புரிந்து செயல்பட வேண்டும். கணவன் மனைவி இருவரில் யார் தவறு செய்தாலும் செய்த குற்றங்களைச் சற்று தள்ளிப் போட்டு விட்டு அவர்கள் அதிலிருந்து வெளியே வரும் வேலைகளை நாம் செய்ய வேண்டும்.அவர்கள் செய்வதையே குத்தி காட்டிவிட்டு மேலும் அவரை குறை கூறிக் கொண்டிருப்பது பாதிக்கப்பட்டவரின் பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.பாதிக்கப்பட்டவரும் தங்களின் தவறை மனப்பூர்வமாக உணர்ந்து மன்னிப்பு கேட்டு, துணையுடன் நல்லபடியாகச் சேர்ந்து வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.அதேநேரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் தகாத உறவு பக்கம் தலை வைத்துக் கூட படுத்து விடக்கூடாது.

​கோபம் கொள்ள வேண்டாம்

பாதிக்கப்பட்டவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் துணையின் காதலன் அல்லது காதலியை அவர்கள் முன்பு கடிந்து கொள்வதோ அல்லது அவர்களே பழிவாங்கும் செயலிலும் ஈடுபட வேண்டாம்.அப்படிச் செய்தால் பிரச்சினை இன்னும் பெரிதாக மாறி விடும். முடிந்தவரை தங்களின் துணையை அவரவரின் காதலியுடன் பேசாதவாறு தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். உறவில் ஈடுபட்டவர்களிடம் தங்களின் தவறை உணர்ந்து பொறுமை காத்து விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் நமது தகாத உறவைச் சந்திக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்தக்கூடாது.

​சண்டையைச் சமாளிக்க

நீங்கள் உங்கள் உறவைப் பற்றிய உண்மையை உங்கள் கணவனிடமோ அல்லது மனைவியிடமோ தெரிவிக்கும் பொழுது, கண்டிப்பாக மிகப் பெரிய பிரச்சனையைச் சந்திக்க நேரிடும். என்றைக்கு இருந்தாலும் அப்படி நீங்கள் சந்திக்கத் தான் வேண்டும். எனவே அதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் எதிர்த்தரப்பு கோபப்படும்போது தவறு செய்த நீங்கள் அதிகமாகக் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் மேல் உள்ள தவறை ஒப்புக்கொண்டு பணிவாக அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்ற உறுதிமொழியைக் கூற வேண்டும். எந்தக் குடும்பத்திலும் தகாத உறவு வெளியே தெரியும் பொழுது அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மொத்தத்தில் தகாத உறவில் ஈடுபடுவது மிகவும் எளிமையான காரியமாக இருக்கலாம். ஆனால் அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.ஒருமுறை இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்து விட்டால், அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வெளியே வரவேண்டும். தேவைப்பட்டால் கவுன்சிலிங் போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்