நேர்மையாக இருங்கள்
உங்கள் மாமியார் உங்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்று ஆராயாமல் நீங்கள் அன்பாக நடந்து கொள்ள பழகுங்கள். மாமியார்கள் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விஷயம் இது. மருமகள் முன் உங்கள் மகளுக்கும் மகனுக்கும் ஏதாவது கொடுக்கிறீர்கள் என்றால் உங்கள் மருமகளுக்கும் கொடுக்க வேண்டும். அது 5 ரூபாய் பெறுமானமுள்ள சாக்லேட் ஆக இருந்தாலும் கூட சமத்துவமின்மை முக்கியம் ஏனெனில் உங்கள் மகளை போன்று உங்கள் மருமகளும் உங்களுக்கு புதிய குழந்தை தான்.
கணவன் மனைவிக்குள் ஆயிரம் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அவர்கள் மீண்டும் இணைந்துவிடுவார்கள். ஊடலிலும் மோதலிலும் அவர்கள் அந்நியோன்யம் குறையாமல் இருக்கும். ஆனால் தேவையில்லாமல் அவர்கள் வாக்குவாதத்தின் போது மூக்கை நுழைக்காதீர்கள். ஒருவருக்கு ஆதரவாக நின்று மற்றவருக்கு எதிராக நிற்காதீர்கள், அது மருமகளாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் சரி. இது அவர்களை தனியாக உணர வைக்கும். உங்களிடமிருந்து விலக வைக்கும்.
காதல் இருந்தாலும் பாலியல் இல்லை என்றால் உறவில் பிரச்சனை தான்! வேறு எதெல்லாம் உறவில் பிளவை உண்டாக்கும்?
கேள்வி கேட்டு துளைக்காதீர்கள்
கேள்விகள் எப்போதும் மற்றவர்களை சங்கடப்படுத்தவோ, கவலைப்படுத்தவோ கூடாது. அதிலும் புதிதாக மணமான தம்பதியரிடம் அடிக்கடி நொடிக்கொரு தரம் கேள்வி கேட்டு தொல்லைப்படுத்த வேண்டாம். ஒவ்வொரு நிமிடமும் என்ன நடந்தது என்று கேட்காமல் நாள் முழுக்க காத்திருந்து இறுதியில் கேள்விகேளுங்கள். மருமகள், மகனுடன் வெளியே சென்றாலும் அவ்வபோது தொணக்காமல் நாள் இறுதியில் எல்லாம் நன்றாக நடந்தது என்று சொல்லுங்கள். நாளடைவில் மாமியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவார்கள்.
மகள் அல்லது மருமகன் பற்றி கிசுகிசுப்பு வேண்டாம்
பெரும்பாலான மாமியார்கள் செய்யும் தவறில் இது முக்கியமானது. மோசமான விஷயமும் கூட. யாரிடமும் உங்கள் மகள்/ மகன்/ மருமகன் பற்றிய எதிர்மறையான விஷயங்களை பகிராதீர்கள். அவர்களாக தெரிந்து கொள்ளும் வரை இது குறித்து பேச்சே வேண்டியதில்லை. தானாக தெரிந்து கொள்ளும் போது அது பெரிய குறைபாடாக அவர்களுக்கு தெரியாது. ஆனல் ஒருவரை பற்றி எதிர்மறையாக பேசும் போது மருமகள் அவரை சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் மீதான மதிப்பு குறையலாம். இது உறவில் விரிசலை உண்டாக்கலாம்.
கோபமாகவே இருக்கும் மனைவியை சமாதானம் செய்வது எப்படி?
வாழ்த்துக்களை மறக்காதீர்கள்
வேலை உயர்வு அல்லது பிறந்த நாள் மருமகள் பெற்றோர் ஆண்டு விழா என எதுவாக இருந்தாலும் உங்கள் வாழ்த்து அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை கொடுக்கும். அவர்களாக சொல்லும் வரை காத்திராமல் முன்கூட்டியே இந்த நாட்களை குறித்து சிறிய பரிசும், நெஞ்சார்ந்த வாழ்த்தும் மருமகளுக்கு உங்கள் மீதான பாசத்தை இரட்டிப்பாக்கும். அந்நியோன்யத்தை அதிகரிக்கும். எத்தகைய மனக்கசப்புகளையும் போக்கும் மருந்தாக இது இருக்கும்
இவையெல்லாம் சின்ன விஷயம் தான். ஆனால் பலன் பெரியதாக கிடைக்கும். மருமகள் விரும்பாத மாமியார் என்றில்லாமல் இதை எல்லாம் உள்ளார்ந்த அன்போடு செய்தாலே மருமகள் மெச்சும் மாமியாராக மாறிவிடுவீர்கள்.