ஆப்நகரம்

எந்தெந்த வேளையில் உறவு கொள்ளலாம்?

காலை பொழுதுகளில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த கொதிப்பு குறைகிறது மற்றும் மன அழுத்தம் நீங்குகிறது என ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர். மதியம் தூங்கி எழுந்து உறவு கொண்டால் புத்துணர்ச்சியுடன் உறவு கொள்ளலாம்.

Samayam Tamil 10 Jun 2019, 1:38 pm
காலை பொழுதுகளில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த கொதிப்பு குறைகிறது மற்றும் மன அழுத்தம் நீங்குகிறது என ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்.
Samayam Tamil sex 2


உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, காய்ச்சல், சளி போன்ற நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, உடலுறவு வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.

பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20 சதவீத பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.

ஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளிவர உடலுறவு வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது.

நாள் முழுக்க விந்துவை வெளிப்படுத்தாமல் உறவு கொள்ளும் முறைக்குப் பெயர் தாந்த்ரிக் செக்ஸ். இதனைச் செய்வதால் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மேலும் இவ்வாறு மாதம் ஒரு முறை செய்துவந்தால் துணை செய்யும் சிறு தவறுகளை நம் இயல்பாக மன்னிப்போம். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகும்.

மதியம் தூங்கி எழுந்து உறவு கொண்டால் புத்துணர்ச்சியுடன் உறவு கொள்ளலாம்.

இரவில் அரை தூக்கத்துக்கு நடுவில் உறவு கொள்வது நல்லதல்ல. இதனை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சோர்வாக இருக்கும்போது உறவு கொள்ளக் கூடாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்