ஆப்நகரம்

மொபைலே கதியாக கிடைக்கும் இந்தியர்கள்!

இந்தியர்கள் தினசரி 4 மணி நேரம் மொபைலில் ஏதாவது அப்ளிகேஷனை பயன்படுத்திக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

TNN 7 Sep 2017, 3:26 pm
இந்தியர்கள் தினசரி 4 மணி நேரம் மொபைலில் ஏதாவது அப்ளிகேஷனை பயன்படுத்திக்கொண்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil day on apps
மொபைலே கதியாக கிடைக்கும் இந்தியர்கள்!


ஆப் அன்னி நிறுவனம் நடத்திள்ள ஆய்வு ஒன்றின் அடிப்படையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் விதம் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளன.

ஸ்மார்ட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட்போனே கதியாக இருக்கும் கேஜெட் பிரியர்கள் நாள் தோறும் 4 மணிநேரம் ஏதாவது அப்ளிகேஷனை பயன்படுத்துகிறார்கள்.

தென் கொரியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 5 மணி நேரம் ஏதேனும் மொபைல் அப்ளிகேஷனில் நேரத்தைக் கழிக்கிறார்கள்.

இந்தியாவில் குறைந்த நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் கூட தினசரி ஒன்றரை மணி நேரத்திற்கு மொபைலில் மூழ்கிவிடுகிறார்கள். நடுத்தர பயனாளர்கள் இரண்டரை மணி நேரம் உபயோகிக்கிறார்கள்.

இந்த ஆய்வு கடந்த மே மாதம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்தபவர்களிடம் நடத்தப்பட்டதாகும்.

அடுத்த செய்தி