ஆப்நகரம்

சீன ஸ்மார்ட் போன்களை விரட்ட இந்திய நிறுவனத்தின் திட்டம்

ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வர இந்திய ஸ்மார்ட் போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் திட்டம் வகுத்துள்ளது.

TNN 20 Mar 2017, 5:26 am
ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வர இந்திய ஸ்மார்ட் போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் திட்டம் வகுத்துள்ளது.
Samayam Tamil micromax has a new plan to take on chinese smartphone companies
சீன ஸ்மார்ட் போன்களை விரட்ட இந்திய நிறுவனத்தின் திட்டம்


ரெட்மீ, லெனோவோ போன்ற சீன ஸ்மார்ட் நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக இந்திய ஸ்மார்ட் போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தனது சந்தை மதிப்பை இழந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில், விட்டதைப் பிடிக்கும் முயற்சியாக இந்திய வாடிக்கையாளர்களை பெருவாரியாக வளைத்துப் போட்டு சீன நிறுவனங்களை விரட்டியடிக்கும் வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாக இருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய பாரத் சீரீஸ் மொபைல்கள் மூலம் 5 முதல் 6 மில்லியன் வாடிக்கையாளர்களை கவர திட்டம் வகுத்திருக்கிறது. பாரத் 2 என்ற ஸ்மார்ட் போன் முதலில் வெளியாகிறது. பின் பாரத் 1 என்ற பேசிக் போன் அறிமுகமாகிறது. இந்த இரண்டிலுமே 4G VoLTE வசதி இருக்கும்.

பாரத் 1 மொபைல் சுமார் 1999 ரூபாய்க்கும் பாரத் 2 மொபைல் சுமார் 3000 ரூபாய்க்கும் விற்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர், பாரத் 3 என்ற மற்றொரு ஸ்மாரட் போனும் வெளியாகும் என்றும் மைக்ரோமேக்ஸ் கூறியிருக்கிறது.

ஏற்கெனவே, சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி