ஆப்நகரம்

பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழகம் வருகை

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழகம் வரவுள்ளார்.

TNN 7 May 2016, 3:32 pm
கன்னியாகுமரி: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழகம் வரவுள்ளார்.
Samayam Tamil modi will campaign in kanyakumari at tamilnadu tomorrow
பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழகம் வருகை


முன்னதாக, நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓசூர் மற்றும் சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அதனையடுத்து, நாளை தமிழகத்துக்கு மீண்டும் வரும் பிரதமர், கன்னியாகுமரி முருகன்குன்றம் அருகே உள்ள ஏழுசாட்டுபத்து மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இதற்காக தலைநகர் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருவார் என தெரிகிறது.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகைக்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே தில்லியில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரி வந்து உள்ளூர் போலீசாருடன் ஆலோசனை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

அடுத்த செய்தி