ஆப்நகரம்

பெண்களுக்கான அரசு அதிமுக அரசு: ஜெயலலிதா பெருமிதம்

பெண்களின் முன்னேற்றம், நல்வாழ்வில் மிக அக்கறையுடன் பல நல திட்டங்களை தீட்டிய தனது அரசுக்கு பெண்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள்என்று சேலத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்

TNN 20 Apr 2016, 4:27 pm
சேலம்: பெண்களின் முன்னேற்றம், நல்வாழ்வில் மிக அக்கறையுடன் பல நல திட்டங்களை தீட்டிய தனது அரசுக்கு பெண்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று சேலத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil my government is for the welfare of women says jayalalaitha
பெண்களுக்கான அரசு அதிமுக அரசு: ஜெயலலிதா பெருமிதம்


பெருந்திரளான மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கூடியிருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெயலலிதா உரையாற்றியதாவது, "ஏழைகள் தங்கள் காலிலேயே நிற்க வேண்டும். ஏழைகளின் வாழ்வு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு வாக்களித்து நான் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தீர்கள்.

அதன் படி, ஆட்சி பொறுப்பேற்ற நான் பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களை தீட்டி மக்களின் நன்மைக்கு பலவாறு உழைத்தேன். குறிப்பாக மகளிர் முன்னேற்றம், நல்வாழ்வுக்கு பல சிறப்பு திட்டங்கள் என்னால் செயல்படுத்தப்பட்டது.

திருமண உதவி திட்டம், மகப்பேறு திட்டம், பசுமை வீடுகள் திட்டம் போன்று நான் முன்னர் சொன்ன திட்டங்களை தவிர, அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்று பல திட்டங்கள் நான் முன்னர் சொல்லாமல் நிறைவேற்றியது என பெருமையாக தெரிவித்து கொள்கிறேன்.

மகளிர் மேம்பாட்டுக்கு நான் பல திட்டங்களை உத்தரவிட்டுள்ளேன். பட்டம், பட்டயம் படித்த பெண்களுக்கு திருமண உதவி திட்டம் ஆகியவற்றை நான் அறிமுகப்படுத்தினேன். பெண் கல்வியை ஊக்குவிக்க நான் மிக சிறந்த திட்டங்ககளை அளித்துள்ளேன். பல புதிய மகளிர் கல்லூரிகள் எனது ஆட்சியில் துவக்கப்பட்டது.

மகளிருக்கு பெரிதும் பயன்படும் மகப்பேறு திட்டம் பெரிதும் போற்றப்படும் திட்டமாக திகழ்கிறது. அம்மா கைபேசி திட்டம், மகளிர் நன்கு உழைத்திட பிரத்யோக தொழிற்பேட்டைகள் எங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. மகளிர் தொழில் புரியும் வாய்ப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்தது எனது அரசு. ஆனால், இதனை திரித்து பொய் உரைக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி" என்று ஜெயலலிதா உரையாற்றினார்.

சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 46 சட்டமன்ற உறுப்பினர்களையும், கேரளாவில் போட்டியிடவுள்ள 7 சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆதரித்து ஜெயலலிதா பரப்புரை மேற்கொள்கிறார்.

அடுத்த செய்தி