ஆப்நகரம்

வாக்கு சேகரிப்பில் வித்தியாசம்: தேர்தல் களத்தில் வேடிக்கை

தமிழக அரசியல் கட்சிகள் சில வித்தியாசன முறையில் வாக்குகளை சேகரித்து வரும் சம்பவம் மக்கள் மத்தியில் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

TNN 7 May 2016, 7:40 pm
விருதுநகர்: ​தமிழக அரசியல் கட்சிகள் சில வித்தியாசன முறையில் வாக்குகளை சேகரித்து வரும் சம்பவம் மக்கள் மத்தியில் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil nanjil sampath begs for vote in campaign
வாக்கு சேகரிப்பில் வித்தியாசம்: தேர்தல் களத்தில் வேடிக்கை


தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் களம் களைகட்டியுள்ளது. வாக்கு கேட்கும் போது மக்களை சந்திக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னர் அவர்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.

இதனிடையே, வேட்பாளர்களின் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது. அவர்கள் கடைபிடிக்கும் சில யுக்திகள் மக்களிடையே வேடிக்கையாகவும் சில சமயம் பார்க்கப்படுகிறது.

குறிஞ்சிபாடி திமுக வேட்பாளர் பன்னீர் செல்வம், "சாமி சத்தியமா எனக்கு வாக்களிக்க வேண்டும், வாக்கு அளிப்பீர்களா?" என்று கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதேபோல், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,"உங்களிடம் பிச்சை கேட்கிறேன்., யாசகம் கேட்கிறேன்., அதிமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்றார்.

மேலும், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மதுரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நான் திருச்செந்தூர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறேன். உங்களது உறவினர்கள் யாரேனும் அங்கிருந்தால் எனக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி