ஆப்நகரம்

பேஸ்புக், டுவிட்டரில் இனி இஷ்டத்துக்கு எழுதமுடியாது!

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் இனி பொய்யான தகவலையோ, கருத்துக்களையோ இனி பதிவு செய்யமுடியாது.

TOI Contributor 25 Oct 2016, 5:49 am
நியூயார்க்: சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் இனி பொய்யான தகவலையோ, கருத்துக்களையோ இனி பதிவு செய்யமுடியாது.
Samayam Tamil new method can detect false posts on facebook twitter study
பேஸ்புக், டுவிட்டரில் இனி இஷ்டத்துக்கு எழுதமுடியாது!


இன்றைய நவீன உலகில் சமூகவலைதளங்கள் மக்களிடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எந்தளவு சாதகம் உள்ளதோ, அதே அளவு பாதமும் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டே தான் ஆகவேண்டும். சமீககாலமாக இந்த சமூக வளைதளங்கள் மூலம் உண்மையான விஷயங்கள் வெளியாவதைவிட, நிறைய பொய்யான விஷயங்களும் தான் அதிகம் உலவுகிறது எனலாம்.

தவிர, இதில் பதிவிடும் செய்திகள் உண்மையோ, பொய்யோ என்பதைப்பற்றி ஆராயாமல் அது தான் நிஜம் என்று மக்களை நம்பவும் வைத்துவிடுகிறது. தவிர, ஒருகூட்டம் பிடிக்காதவர்களை ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவதற்கு என்றே இதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குறைகளை சரி செய்ய வேண்டும் என்ற முயற்சியில் மும்முரமாக பேஸ்புக், டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டு கிட்டத்தட்ட அதில் வெற்றி பெற்றுள்ளது எனலாம். இனி நாம் பதிவிடும் பொழுதுதோ அல்லது கருத்து தெரிவிக்கும்போதோ, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை கொண்டு, அது தவறான கருத்தாக என முன்கூட்டியே பதிவு செய்துள்ள கருத்துக்களை ஒப்பிட்டுபார்த்த பின் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை மிகவும் கடினமானது என கம்ப்யூட்டர் வாசிகள் செய்தாலும், நவீன உலகில் பேஸ்புக், டுவிட்டர், பல விதங்களில் மக்களின் தேவைக்கும் பயன்பாட்டுக்கும் முக்கியமான அங்கமாக இருப்பதால் இதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், ஒருவழியக அதில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி