ஆப்நகரம்

ஆந்திர மாநிலத்தில் கடும் வெயில் - ஒரே நாளில் 3 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.

TNN 6 Apr 2017, 12:23 pm
திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.
Samayam Tamil over headwave 3 dead in andrapradesh
ஆந்திர மாநிலத்தில் கடும் வெயில் - ஒரே நாளில் 3 பேர் பலி


கடந்த 2 ஆண்டுகளாக பருவநிலை மாறுபாடு காரணமாக காலம் மாறி அதிக வெயிலும், மழையிம் மாறிமாறி ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதிக வெயில் நிலவும் என்றும், மழையம் பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதன்படியே, தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் கடும் வெயில் நிலவி வருகிறது. அடுத்த மாதம் கத்திரி வெயில் காலம் தொடங்கவுள்ள நிலையில் ஆந்திர பிரதேசம், தமிழகம் ஆகிய மாவட்டங்களில் வெளியில் அதிகளவில் கொளுத்தி வருகிறது. அனல்காற்று வீசுவதால் மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர பிரதேசம் திருப்பதி அருகேயுள்ள சித்தூர் மாவட்டம், பிதுவதாண்டா பகுதியைச் சேர்ந்த தேவலநாயக் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து இறந்தார். இதேபோல், ஸ்ரீகாளஹஸ்தி ஆஞ்சநேயபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குருவய்யா, வரதய்யபாளையம் மண்டலம், இந்திராநகர் தேவேந்திராபுரத்தைச் சேர்ந்தகிருஷ்ணம்மா(72) ஆகியோரும் வெயிலால் மயங்கி விழுந்து இறந்தனர்.

அடுத்த செய்தி