சுஷாங் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14, 2020 அன்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இவரும், இந்தி நடிகை ரியாவும் சில காலமாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் சிறிது காலம் ஒரே வீட்டில் லிவிங்-டுகெதர் உறவில் இருந்தனர். ஆரம்பத்தில், வெறும் கிசுகிசு என நம்பட்டு வந்த இந்த உறவு, சுஷாந்த் மரணத்திற்கு பிறகான விசாரணையில், ரியா வாக்குமூலம் வாயிலாக, இந்த காதல் நிஜம் தான் என்பது ஊர்ஜிதம் ஆனது.
சுஷாந்த் சிங் இறந்து ஒருமாத காலம் ஆகியிருக்கும் இச்சமயத்தில், அவரது காதலி ரியா, தனது இன்ஸ்டா பதிவில், தங்கள் இருவரின் புகைப்படம் மற்றும் சுஷாந்த் மரணம் குறித்து ஓர் உருக்கமான பதிவிட்டிருந்தார்.
All image credit :rhea_chakraborty/