நடிகர் கார்த்திக் நவரச திலகம் என போற்றப்பட்ட பழம்பெரும் நடிகர் முத்துராமன் அவர்களுடைய மகன். தந்தையின் பட்டத்தின் மூலமாகேவே இவருக்கும் நவரச நாயகன் எனும் பட்டம் வர காரணமாக இருந்தது. பட்டத்திற்கு ஏற்றார் போல நல்ல நடிப்பு திறனும் கொண்டிருந்தார் நடிகர் கார்த்திக்.
நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை ராதா, இயக்குனர் பாரதி ராஜாவின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகினர்.
தன்னுடன் சோலை குயில் படத்தில் நடிகை ராகினியுடன் ஜோடி சேர்த்து நடித்திருந்தார்.
நடிகை ரோகினியுடன் காதல்வயப்பட்ட நடிகர் காரத்தை அவரை 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிறகு, தன் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, அவரை விவாகரத்து செய்யாமலே 1992ம் ஆண்டு நடிகை ராகினியின் தங்கையான ரதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் கார்த்திக்.
தனது முதல் மனைவி ராகினி மூலம் நடிகர் கார்த்திக் அவர்களுக்கு கௌதம் கார்த்திக், கயன் கார்த்திக் என இரு மகன்கள் இருக்கிறார்கள்.
இதில், மூத்த மகன் கௌதம் கார்த்திக் ஏற்கனவே தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரண்டாவது மனைவி ரதி மூலம் நடிகர் கார்த்திக் அவர்களுக்கு திரன் கார்த்திக் எனும் ஒரு மகனும் இருக்கிறாராம்.