ஆப்நகரம்

அவசரப்படாதீங்கப்பா! தானியங்கி விமானம் இன்னும் ஆய்வில் தான் இருக்கு: போயிங் நிறுவனம்!

தானியங்கி விமானங்கள் இன்னும் ஆய்வில் தான் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNN 9 Jun 2017, 6:17 am
பாரிஸ்: தானியங்கி விமானங்கள் இன்னும் ஆய்வில் தான் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil pilotless planes are testing mode says boeing chief
அவசரப்படாதீங்கப்பா! தானியங்கி விமானம் இன்னும் ஆய்வில் தான் இருக்கு: போயிங் நிறுவனம்!


உலகின் மிகப்பெரிய விமான நிறுவனமாக போயிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பிரம்மாண்ட விமானங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுகிறது. இந்நிலையில் தானியங்கி கார், தானியங்கி பேருந்து போன்று தானியங்கி விமானமும் சோதனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போயிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் மைக் சின்நெட், தானியங்கி விமானத்திற்கான தொழில்நுட்பத்தில் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

அதன் அடிப்படை கட்டமைப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உறுதித்தன்மை பெற வேண்டும் என்று கூறினார். குறிப்பாக அவசர காலங்களில் தானியங்கி விமானங்கள் எந்த அளவிற்கு துல்லியமாக செயல்படும் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். தற்போது ஆளில்லா விமானங்கள் சிறிய அளவில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Pilotless planes could be airborne in just a year using drone technology says Boeing chief.

அடுத்த செய்தி