ஆப்நகரம்

எங்களது கூட்டணியே வெற்றி பெறும்: ராகுல் நம்பிக்கை

எங்களது கூட்டணியே வெற்றி பெறும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TNN 11 Mar 2017, 8:17 am
புதுதில்லி: எங்களது கூட்டணியே வெற்றி பெறும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rahul gandhi dismisses exit polls says our alliance is winning in up
எங்களது கூட்டணியே வெற்றி பெறும்: ராகுல் நம்பிக்கை


மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவை, அதேபோல் உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் முடிவடைவதால், அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றாற்போல் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

பெரிய எதிர்பாபுகளை ஏற்படுத்தியுள்ளதும், நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றுமான உத்தரப்பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சமாஜ்வாடி - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அதேபோல், முக்கிய கட்சிகளான பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று முடிந்த தேர்தல் கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.

அதில், ஒன்றான சிவோட்டரின் கருத்துக் கணிப்புப் படி, உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் எனவும், உத்தரக்காண்டில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் சம அளவிலான இடங்களை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தான் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் உள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக-வே வெற்றி பெரும் என கணித்துள்ளது.

இந்நிலையில், எங்களது கூட்டணியே வெற்றி பெறும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிகார் தேர்தலில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தவறாகவே இருந்தது என்று சுட்டிக் காட்டிய ராகுல், எங்களது கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.
Rahul Gandhi dismisses exit polls, says ‘our alliance is winning’ in UP

அடுத்த செய்தி