ஆப்நகரம்

5 மாநில தேர்தல் முடிவுகள்; தேர்தல் ஆணையம் தயார்!

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 18 May 2016, 8:30 pm
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil ready to announce 5 states assembly poll results ec
5 மாநில தேர்தல் முடிவுகள்; தேர்தல் ஆணையம் தயார்!


மேற்கு வங்கம், அசாம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கும், கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி தொடங்கி, பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மேற்கு வங்கம் மற்றும் அசாமிற்கு, பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்றநிலையில், தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கும், கடந்த 16ம் தேதி ஒரே கட்டமாக, வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

இதன்படி, தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகளும் நாளை வெளியிடப்படுகின்றன. இதையொட்டி, தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் விதமாக, விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் eciresults.nic.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் வெளியிடப்படும் என்றும், தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த 5 மாநிலங்களிலும் உள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி