ஆப்நகரம்

ஜியோ டேட்டா கசிந்த விவகாரம்; மென்பொறியாளர் கைது...!

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடப்பட்ட சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 12 Jul 2017, 8:54 am
ஜெய்ப்பூர்: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடப்பட்ட சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil reliance jio data leak one person detained in rajasthan
ஜியோ டேட்டா கசிந்த விவகாரம்; மென்பொறியாளர் கைது...!


ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவையை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிரடி சலுகைகளால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகுசீக்கிரம் இடம்பிடித்துவிட்டது. இந்நிலையில் ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும், "Magicapk.com" என்ற தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை ஜியோ நிறுவனம் மறுத்தது.

தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவருக்கும், ஜியோ தகவல்கள் திருடு போனதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Reliance Jio data leak One person detained in Rajasthan.

அடுத்த செய்தி