ஆப்நகரம்

ஜியோவில் ரீசார்ஜ் செய்யதவர்கள் இணைப்பு துண்டிப்பு

இலவச சேவைக்குப் பின் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துண்டித்துள்ளது.

TNN 17 Apr 2017, 5:51 pm
இலவச சேவைக்குப் பின் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துண்டித்துள்ளது.
Samayam Tamil reliance jio starts disconnecting those who havent recharged yet
ஜியோவில் ரீசார்ஜ் செய்யதவர்கள் இணைப்பு துண்டிப்பு


ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட போது வெல்கம் ஆஃபர் என்ற பெயரிலும் புத்தாண்டுக்குப் பின் ஹேப்பி நியூ ஆஃபர் என்ற பெயரிலும் அனைத்து சேவைகளையும் இலவசவமாக அளித்தது.

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த இலவச சேவை, ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மேலும், கோடைகாலச் சலுகை ஒன்றையும் அளித்தது. இச்சலுகையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, பின்னர் ரத்து செய்தது.

அதற்கு மாறாக, மேலும் கவர்ச்சிகரமான தன் தனா தன் என்ற ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ ப்ரைமில் இணைந்தவர்கள், ரூ.309க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை பயன்படுத்தலாம். ஜியோ ப்ரைமில் இணையாதவர்களும் கூடுதலாக ரூ.99 செலுத்தி மொத்தம் ரூ.408க்கு இந்த ஆஃபரை பெறலாம்.

இந்நிலையில், இலவச சேவைக்குப் பின் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் கூட செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி