ஆப்நகரம்

ராகு , கேது தோஷம் நீக்கும் பவானி!

ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் பவானி. காவிரி, பவானி, அமுதநதி என ஆறுகள் மூன்று கூடும் அற்புத மான க்ஷேத்திரம் இது.

TOI Contributor 22 Jun 2016, 8:55 pm
ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் பவானி. காவிரி, பவானி, அமுதநதி என ஆறுகள் மூன்று கூடும் அற்புத மான க்ஷேத்திரம் இது.
Samayam Tamil
ராகு , கேது தோஷம் நீக்கும் பவானி!


இங்கே, அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயம், உலகின் அத்தனை தெய்வ கடாட்சங்களும் சங்கமிக்கும் திருவிடமாகத் திகழ்கிறது. இதே கோயிலில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளுக்கும் தனிச்சந்நிதி உள்ளது சிறப்பு.

மகா சிவராத்திரி, கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி முதலான விழா வைபவங்கள் இங்கே விசேஷம். ஆடி, தை மற்றும் மஹாளயபட்ச அமாவாசை தினங்களிலும் முன்னோர் திதி நாட்களிலும் பவானி கூடுதுறையில் பித்ருக் கடன்கள் ஆற்றுவதும், சங்கமேஸ்வரரைத் தரிசித்து வழிபடுவதும் புண்ணியப் பலன்களைப் பெற்றுத் தரும்.

இந்தத் தலத்துக்கு வந்து, பூமாலைகள் சமர்ப்பித்து சங்கமேஸ்வரரை வழிபட, மாங்கல்ய பலம் கிட்டும்; ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்