ஆப்நகரம்

சிதம்பரம் கோயிலில் கோடி அர்ச்சனை நிறைவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோடி அர்ச்சனை லட்சம் ருத்ர பாராயணம் ஆகியவை தொடங்கி இன்று 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் வைபவ நிகழ்வாக நேற்று நடராஜர் கோயில் தேவ சபையில் லட்சகணக்கில் ரூபாய் நோட்டுக்கள்வைக்கப்பட்டு தன பூஜை நடைபெற்றது.

TOI Contributor 15 Sep 2016, 1:41 pm
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோடி அர்ச்சனை லட்சம் ருத்ர பாராயணம் ஆகியவை தொடங்கி இன்று 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் வைபவ நிகழ்வாக நேற்று நடராஜர் கோயில் தேவ சபையில் லட்சகணக்கில் ரூபாய் நோட்டுக்கள்வைக்கப்பட்டு தன பூஜை நடைபெற்றது.
Samayam Tamil  chidambaram temple kodi archchanai
சிதம்பரம் கோயிலில் கோடி அர்ச்சனை நிறைவு!


இதன் பின்பு தேவ சபையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு இன்று அதிகாலை 4- மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு காலை 8 மணிக்குள் உச்சிகாலபூஜைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து விசேஷ ஹோமங்கள் நடைபெறுகின்றன.

ஒன்பது யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குண்டத்துக்கும் 12 ஆச்சார்யர்கள் ஹோமம் செய்ய உள்ளனர். பின்பு மாலை ஹோமம் முடிவுற்று மாலை 6 மணிக்கு நடராஜருக்கும் சிவகாமசுந்தரி அம்மனுக்கும் விசேஷ அபிஷேகம் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும் இந்த வைபவத்தால் சிதம்பரம் நடராஜர் கோயில் இன்று 15ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு நாளை 16ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு நடை சார்த்தப்படும்.

இந்த கோடி அர்ச்சனை லட்ச ருத்ர பாராயணத்துக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சதர்கள் செய்துள்ளனர். மேலும் இந்த வைபவம் இன்று நிறைவுறுவதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர் என்று வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்