ஆப்நகரம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் தீ விபத்து!!

திருநள்ளாறு கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு அலுவலக கணினிகள் தீயில் கருகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

TOI Contributor 24 May 2017, 6:29 pm
திருநள்ளாறு கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு அலுவலக கணினிகள் தீயில் கருகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil  fire at sri saneeswaran temple in karaikal
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் தீ விபத்து!!


நவக்கிரக கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கோயில் பிரகாரத்தின் முன் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அலுவலக அறையில் உள்ள குளிர் சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியது.

இதனால், கோயிலின் முக்கிய தரவுகளை கொண்ட கணினிகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரும் டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவிருக்கும் நிலையிலும், கோயிலுக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்று கொண்டு நிலையிலும் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fire at Sri Saneeswaran temple in Karaikal

அடுத்த செய்தி

டிரெண்டிங்