ஆப்நகரம்

ஏழுமலையானுக்கு தங்கத்தாமரை அர்ச்சனை!

திருவேங்கடவனுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையில் அஷ்டோத்தர அர்ச்சனை செய்யப்படுவது திருமலை தேவஸ்தானத்தின் நடைமுறை. தெய்வத் திருமேனிகளுக்கு அர்ச்சனை செய்ய இயற்கையாகவே மலர்ந்த பூக்களை அப்போது பயன்படுத்தப்படுவார்கள்!

TOI Contributor 8 Oct 2016, 5:58 pm
திருவேங்கடவனுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையில் அஷ்டோத்தர அர்ச்சனை செய்யப்படுவது திருமலை தேவஸ்தானத்தின் நடைமுறை. தெய்வத் திருமேனிகளுக்கு அர்ச்சனை செய்ய இயற்கையாகவே மலர்ந்த பூக்களை அப்போது பயன்படுத்தப்படுவார்கள்!
Samayam Tamil  golden lotus archanai to tirupathi perumal
ஏழுமலையானுக்கு தங்கத்தாமரை அர்ச்சனை!


ஆனால் இந்த அர்ச்சனை தங்கப் பூக்களால் செய்யப்படுகிறது. திருநாமம் ஒன்றுக்கு ஒரு தங்கத் தாமரை மலர் வீதம் 108 தங்கத் தாமரை மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சேவை ‘அஷ்டோத்தர ஸ்வர்ண பாத பத்ம ஆராதன சேவை’ என்று அழைக்கப்படுகிறது. அந்த பத்ம தளங்கள் 1982-ம் ஆண்டு வேறு மதத்தை சார்ந்த பக்தரால் இதயப்பூர்வமாக வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டவை என்பது நெகிழவைக்கும் செய்தி!

அவரால் தரப்பட்ட 108 தங்க மலர்கள் கொண்டு திருவேங்கடவனுக்கு அர்ச்சனை செய்யும் ‘அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை’ ஆர்ஜித சேவையாக 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது திருமலை தேவஸ்தான நிர்வாகத்தின் பொன் விழா ஆண்டில் அனைவரின் நினைவிலும் நிற்கக்கூடிய ஆர்ஜித சேவையாகவும் இருந்தது.

அதன்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவை முடிந்து, நைவேத்தியத்தின்போது ‘கண்டாநாதம்’ எனப்படும் மிகப்பெரிய மணி ஒலிக்கப்படுகிறது. பின்னர் திருவேங்கடவனுக்கு காலை 6 முதல் 7 மணி வரை ‘அஷ்டோத்தர சத நாம’ (108) அர்ச்சனை செய்யப்படுகிறது. ‘சஹஸ்ர நாம அர்ச்சனையை யார் செய்தாலும், பார்த்தாலும், கேட்டாலும் சர்வ தோஷங்களும் நீங்கிவிடும்’ என்று நாரத மகரிஷியால் அருளப்பட்டுள்ளது.

வேங்கடவனின் 108 திருநாமங்களை ஒருவர் உச்சரிக்கும்போது, கருவறையில் மூலவர் வேங்கடவன் திருப்பாதங்களுக்கு கீழ் உள்ள பீடத்தில் அர்ச்சகர் அமர்ந்துகொண்டு ஒரு திருநாமத்துக்கு ஒரு மலர் வீதம் 108 தங்க மலர்களை அர்ச்சிப்பார். எட்டு இதழ்கள் கொண்ட அந்த தங்கத் தாமரை ஒவ்வொன்றும் 23 கிராம் கொண்டது!

திருமலையில் தரிசனம் செய்ய ஒரு வருட காலத்தில் ஏறக்குறைய மூன்று கோடி பக்தர்கள் வருகை புரிகிறார்கள். அதில் தோராயமாக பத்தாயிரம்பேர் கடப்பா, கர்நூல், அனந்தப்பூர், ஐதராபாத், மதனப்பள்ளி மற்றும் புங்கனூர் போன்ற இடங்களிலிருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்தும் மத வித்தியாசங்கள் கருதாமல் வரக்கூடிய பக்தர்கள் என்பது ஆச்சரியமான தகவல்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்