ஆப்நகரம்

Ramakrishna: ராம கிருஷ்ண பரமஹம்சர் 132வது நினைவு தினம் இன்று!

இந்தியாவின் ஆன்மிக குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் 132வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Samayam Tamil 16 Aug 2018, 10:31 am
இந்தியாவின் ஆன்மிக குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் 132வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Samayam Tamil 2


மேற்குவங்கத்தின் காமார் புகூர் கிராமத்தில் பிறந்தவர் ராம கிருஷ்ண பரமஹம்சர். இவரின் இயற்பெயர் கதாதர் சட்டோ பாத்யா.

இளம் வயதில் பள்ளிப் படிப்பில் இவருக்கு ஆர்வம் இல்லை. இயற்கையை ரசிப்பது, புராணக் கதை கேட்பது, விளையாடுவதையே விரும்பினார். அதே போல ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தார்.

இவர் காளியை நேரில் காண கடும் தியானம் மேற்கொண்டு, கைகூடாததால் காளி கையில் இருந்த வாளை உருவி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். இதையடுத்து பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். பின் அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. பித்து பிடித்துவிட்டதாக பயந்துபோன அம்மா, திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினார்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை மிகவும் எளிமையானது; பக்தி நெறியும் வைராக்கியமும் ஒன்று சேர்ந்தது. அவருடைய அமுத மொழியோ மிகமிகத் தெளிவானது. ஆழ்ந்த அனுபவ அறிவோடு உண்மை அறிவும் வாய்க்கப் பெற்றவர் ஆகையால் பரமஹம்சரின் வாக்கில் அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும் களிநடம் புரிந்தது.

இவரது புகழ் பரவியது. பக்தர்கள் குவிந்தனர். அவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். நாடி வருவோருக்கு எளிய ஆன்மிக, தத்துவ, கதைகளைக் கூறி மகத்தான விஷயங்களைப் புரியவைப்பது ராமகிருஷ்ணரின் வழக்கம்.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்பற்ற ஆன்மிக குரு ராமகிருஷ்ணர் தனது 50வது வயதில் மறைந்தார். இன்று இவரின் 132வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்