ஆப்நகரம்

அம்மனுக்கு சுடிதார் அணிவித்த 2 குருக்கள் பணி நீக்கம்!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாத கோயிலின் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அணிவித்த இரண்டு குருக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Samayam Tamil 5 Feb 2018, 3:25 pm
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாத கோயிலின் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அணிவித்த இரண்டு குருக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
Samayam Tamil 2 preist have dismissed from temple works on the complaint of drapping the goddess with salwar
அம்மனுக்கு சுடிதார் அணிவித்த 2 குருக்கள் பணி நீக்கம்!!


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாத கோயிலில் அபயாம்பிகை அம்மனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இங்கு குருக்களாக பணியாற்றும் கல்யாணம் மற்றும் ராஜ் குருக்கள் இருவரும் அம்மனுக்கு கடந்த வாரம் சுடிதார் அணிவித்து அலங்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில் எப்போதும் அம்மனுக்கு புடவை சாத்துவதை மாற்றி சுடிதார் அணிவிப்பது ஆகம விதிகளுக்கு மாறானது என்று கூறி, இந்த செயலில் ஈடுபட்ட இரண்டு குருக்களையும் திருவாவடுதுறை ஆதினம் பணியில் இருந்து நீக்கம் செய்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்