ஆப்நகரம்

சாய்பாபாவின் 99-வது மகா சமாதி தினம்-பகதர்கள் பங்கேற்பு.!

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் ஷிர்டி சாய்பாபாவின் 99-வது மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டது.

TNN 1 Oct 2017, 12:48 pm
மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் ஷிர்டி சாய்பாபாவின் 99-வது மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
Samayam Tamil 99th anniversary of shirdi sai baba
சாய்பாபாவின் 99-வது மகா சமாதி தினம்-பகதர்கள் பங்கேற்பு.!


ஷிர்டி சாய்பாபா, விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 99-வது சமாதி தினம், விஜயதசமி தினமான நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் நேற்று காலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து, சாய்பாபாவின் ஆசியைப் பெற்றனர்.

இதில் சிறப்பு நிகழ்ச்சியாக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், மாலை 3 மணிக்கு, சொற்பொழிவாளர் மவுல்வி மொஹைதீன் சாஹுல் அமீது பங்கேற்று, திருக்குரான் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் பின்னர், மாலையில், மயிலாப்பூரில் உள்ள அனைத்து மாடவீதிகள் வழியாகவும் சாய்பாபா ஊர்வலம் நடைபெற்றவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

99th anniversary of shirdi sai baba.!

அடுத்த செய்தி

டிரெண்டிங்