ஆப்நகரம்

திருப்பதியில் வாடகை அறை முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பகதர்களுக்கு ஆதார் அட்டை இருந்தால் வாடகை அறை தரப்படும் என்று தேவாஸ்தான் தெரிவித்துள்ளது.

TNN 13 Jul 2017, 2:51 am
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பகதர்களுக்கு ஆதார் அட்டை இருந்தால் வாடகை அறை தரப்படும் என்று தேவாஸ்தான் தெரிவித்துள்ளது.
Samayam Tamil aadhar card must for pilgrims to get accomadation room in tirupati
திருப்பதியில் வாடகை அறை முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்


இந்து கோவில்களில் உலகளவில் மிகவும் பிரசிதிப்பெற்ற கோவில் திருமலை திருப்பதி கோவில் ஆகும். உலகிலேயே பணகார கடவுள் என அழைக்கப்படும் திருமலை ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் நாள்தொறும் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வந்து செல்லும் பக்த்தர் தங்குவற்கு அறைகள் குறைந்த விலையில் திருப்பதி தேவஸ்தானம் வாடகைக்கு விட்டு வருகிறது.இந்த அறைகளை பதிவு செய்ய பக்கதர்கள் பல மணிநேரம் வரிசையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையை தவிர்க்க புதிய வசதி ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதிப்படி , திருப்பதி தேவஸ்தானம் மத்திய விசாரணை அலுவலகத்தில் பத்து அறைகள் திறக்கப்பட்டுள்ளது . அறைகள் தேவைப்படுவோர் அங்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்த நபர்கள் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை .அவர்களது மொபைல் எண்ணுக்கே எஸ்.எம்.எஸ் மூலமாக காலி அறை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.இந்த முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது,

தற்போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட், தங்கும் அறை பதிவு செய்பவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்