ஆப்நகரம்

ஆலங்குடி குரு சந்நிதியில் தகதகக்குது விமானம்!

நவக்கிரகத் திருத்தலங்களில் குரு பகவானுக்கு உரிய தலமாகப் போற்றப்படும் ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருதட்சிணாமூர்த்தி சந்நிதியின் தங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

TOI Contributor 12 Jul 2016, 6:22 pm
நவக்கிரகத் திருத்தலங்களில் குரு பகவானுக்கு உரிய தலமாகப் போற்றப்படும் ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருதட்சிணாமூர்த்தி சந்நிதியின் தங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Samayam Tamil aangudi guru temple kumbabishekam
ஆலங்குடி குரு சந்நிதியில் தகதகக்குது விமானம்!


இங்கே உள்ள ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சந்நிதியில் விமானம் செப்புத் தகடுகளால் வேயப்பட்டு அதில் தங்க முலாம் பூசி விமானத்தில் பொருத்தப்பட்டது. சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பக்கலைஞர்கள் இந்த தங்கத்தகட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தங்க விமான மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்து சாந்தி, யாகபூஜை, பூர்ணாஹுதி, திங்கள்கிழமை யாகபூஜை, பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு முதலான பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜை காலங்களில் மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடந்தது.

சுவாமிமலை சுந்தரமூர்த்தி சிவாச்சார்யர், குரு ஸ்தலத்தின் அர்ச்சகர் ஜோதிராமலிங்க சிவாச்சார்யர், ரமேஷ்சுவாமிநாத சிவாச்சாரியார், சோ.ஞானஸ்கந்தன் சிவாச்சார்யர் முதலானோர் கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.

இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர், இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வருகிற வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிடு, அன்றைய தினமும் தங்கத் தகடு வேய்ந்த விமானத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்