ஆப்நகரம்

நடிகனாக இருப்பதை விட ஆன்மீகவாதிய இருக்க விரும்புகிறேன் - ரஜினி

கோடம்பாக்கத்தில் நடந்த ‘தெய்வீகக் காதல்’ என்ற ஆன்மிக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தன் ஆன்மிக அனுபவங்கள் குறித்து பேசினார்.

TOI Contributor 4 Feb 2017, 7:45 pm
கோடம்பாக்கத்தில் நடந்த ‘தெய்வீகக் காதல்’ என்ற ஆன்மிக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தன் ஆன்மிக அனுபவங்கள் குறித்து பேசினார்.
Samayam Tamil actor rajinikanths spiritual speech in deiveega kadhal book releasing function
நடிகனாக இருப்பதை விட ஆன்மீகவாதிய இருக்க விரும்புகிறேன் - ரஜினி

ரஜினிகாந்த் பேசியதாவது:
எனக்கு பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டும் என கேட்டால் நான் ஆன்மிகம் தான் வேண்டும் என கூறுவேன்.
ஆன்மிகத்தில் அதிக சக்தி கிடைக்கும் என்பதால்அதை பின்பற்ற பிடிக்கும்.
சச்சிதானந்தன் என் ஆன்மிக வழிகாட்டி. சச்சிதானந்தன் மறைவுக்கு பின் பல்வேறு குருக்களை பின்பற்றி வருகின்றேன். என் ஆன்மீக தேடல் தொடர்ந்து கொண்டே உள்ளது.

அதனால் நான் குழப்பவாதி இல்லை, என் முதல் குரு சச்சிதானந்தர் தான். ராகவேந்திரரிடம் பக்தியை கற்றுக்கொண்டேன்.

நான் அவ்வப்போது இமயமலைக்கு செல்வது குறித்து அறிந்திருப்பீர்கள். இமயமலையில் பல்வேறு ஆன்மிக ரகசியங்கள் உள்ளன. அதனால் அங்கு செல்ல எப்போது ஆவலாக இருக்கும்.

நான் நடிகன் எனபதை விட ஆன்மிகவாதி என கூறிக்கொள்வதில் மிகுந்த பெருமையடைகிறேன். என பேசினார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்