ஆப்நகரம்

அல்லிக்கேணி யோக நரசிம்மருக்கு 22ம் தேதி ஸம்ப்ரோக்ஷணம்!

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ யோகநரசிம்மருக்கு வருகிற 22ம் தேதி திங்கட்கிழமை மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.

TOI Contributor 12 Aug 2016, 6:31 pm
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ யோகநரசிம்மருக்கு வருகிற 22ம் தேதி திங்கட்கிழமை மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.
Samayam Tamil allikeni yoga narahsimmar chennai tiruvallikeni
அல்லிக்கேணி யோக நரசிம்மருக்கு 22ம் தேதி ஸம்ப்ரோக்ஷணம்!


திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில், ஸ்ரீயோக நரசிம்மர் தனிக்கோயில் கொண்டு சேவை சாதிக்கிறார். இந்தக் கோயிலுக்கு வரும் 22ம் தேதி திங்கள் அன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் மஹாசம்ப்ரோக்ஷணம் விமரிசையாக நடைபெறுகிறது.

அதையொட்டி ஸ்ரீ யோகநரசிம்மருக்கும், ஸ்ரீ வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், கோபுர மேல்தளம், கீழ்தளங்கள் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி ரூ.95 லட்சம் செலவில் திருப்பணிகள் கடந்த ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி சிறப்புற நடைபெற்றன.

மேலும் ரூ.55 லட்சம் மதிப்பில் சுவாமி கீரிடம், கர்ணபத்திரம், ஸ்ரீசடகோபம், கவசங்களுக்கு தங்கத்தகடுகள் பதிக்கும் பணிகளும் நடைபெற்றன.

ஆலயத்தில் உள்ள கோபுரக் கலசங்களுக்கு தங்கநீர் தோய்க்கும் பணியும் முதல் முறையாக ஸ்ரீ நரசிம்ம சுவாமிக்கு சொர்ணபந்தனமும், ஸ்ரீகஜேந்திர வரதராஜ சுவாமிக்கு ரஜத பந்தனமும் பொருத்தப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பூஜை ஏற்பாடுகளை பட்டாச்சார்யர்களும் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்