ஆப்நகரம்

இணைந்த அரச,வேப்பமரங்கள்! தாத்பர்யம் என்ன?

அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். அரசமரம் சிவபெருமான். வேம்பு சக்தி எனப்படும் தேவி. பொதுவாக, அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டு வைப்பதில்லை. அவை தானாகவே ஒன்றிணைந்து வளருகின்றன. எல்லா இடங்களிலும் அவ்வாறு ஒன்றிணைந்து வளருவதும் கிடையாது. நதிக்கரைகள், சாந்நித்தியம் நிறைந்த இடங்கள் முதலானவற்றில் மட்டுமே அவை இரண்டும் ஒன்றிணைந்து வளர்கின்றன.

TOI Contributor 3 Jun 2016, 4:59 pm
அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். அரசமரம் சிவபெருமான். வேம்பு சக்தி எனப்படும் தேவி. பொதுவாக, அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டு வைப்பதில்லை. அவை தானாகவே ஒன்றிணைந்து வளருகின்றன. எல்லா இடங்களிலும் அவ்வாறு ஒன்றிணைந்து வளருவதும் கிடையாது. நதிக்கரைகள், சாந்நித்தியம் நிறைந்த இடங்கள் முதலானவற்றில் மட்டுமே அவை இரண்டும் ஒன்றிணைந்து வளர்கின்றன.
Samayam Tamil arasa maram and veppa maram details
இணைந்த அரச,வேப்பமரங்கள்! தாத்பர்யம் என்ன?


அரசமரம் போன்ற மிகப்பெரிய மரங்கள் தனக்கு அருகில் வேறொரு மரத்தை வளர விடாது. விதிவிலக்காக வேப்ப மரம் அரச மரத்தின் வேரோடு ஒன்றாக இணைந்து வளர்கிறது. வேப்பம்பழத்தை விழுங்கி விட்டு அரசமரக் கிளைகளில் வந்து அமருகின்ற காகத்தின் எச்சத்தில் இருந்து விழுகிற வேப்பங்கொட்டைகளில் இருந்து வேப்ப மரம் வளர்கிறது என்கிறார்கள் தாவர ஆய்வாளர்கள்.

அதேநேரம், மற்ற மரங்களில் சென்று அமர்கிற காகத்தின் எச்சத்திலிருந்து விழும் வேப்பங்கொட்டைகள் அவ்வாறு அந்த மரத்தின் வேரோடு இணைந்து வளருவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். எனவேதான் அரசம், வேம்பு ஆகிய இரண்டு மரங்களும் இணைந்திருக்கிற அந்தக் குறிப்பிட்ட இடம் தெய்வ சாந்நித்தியம் நிறைந்ததாகத் திகழ்கிறது. இவை இரண்டுக்கும் திருக்கல்யாணம் செய்வித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்!

சிவசக்திக்கு இணைவாக கருதப்படும் இந்த மரங்களின் அடியில் அவர்களின் பிள்ளையான பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். அதிகாலையில் ஸ்நானம் செய்து பிள்ளையாரையும் மரங்களையும் சுற்றி வருவோருக்கு புத்திர தோஷம் நீங்கும். சந்தான பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம்! தம்பதிக்குள் அந்நியோன்யம் கூடும். திருமணத் தடை நீங்கும்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்