ஆப்நகரம்

ஆவணித் திருவிழாவில் பக்தர்கள் கூட்டம்!

திருச்செந்தூர் திருத்தலத்தில் ஆவணித் திருவிழாவையொட்டி தினமும் வீதிபுறப்பாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் காட்சி தந்தருள்கிறார் முருகப்பெருமான்.

TOI Contributor 24 Aug 2016, 1:27 pm
திருச்செந்தூர் திருத்தலத்தில் ஆவணித் திருவிழாவையொட்டி தினமும் வீதிபுறப்பாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் காட்சி தந்தருள்கிறார் முருகப்பெருமான்.
Samayam Tamil avani thiruvizha devotees to murugan temple
ஆவணித் திருவிழாவில் பக்தர்கள் கூட்டம்!


திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 2-ஆம் திருநாளை முன்னிட்டு, சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடய வாகனத்திலும், வள்ளியம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளினர்.

ஆவணித் திருவிழா கடந்த 22ம் தேதி திங்கள்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமியும் அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

2-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை சுவாமி குமரவிடங்கப் பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்மை சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, தூண்டுகை விநாயகர் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் சேர்ந்தனர். தொடர்ந்து அம்மன் மட்டும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மண்டபம் சேர்ந்தார்.

இரவில் மண்டபத்திலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளி மேலக்கோயில் சேர்ந்தனர்.

ஆவணித் திருவிழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை இன்று காலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்மன் பெரிய பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக் கிடா வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்