சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து, தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை அடுத்து தமிழகம் முழுவதுமுள்ள ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர். ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் முதல் நாளன்று மாலை அணிந்து தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம்.
ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். இன்று கார்த்திகை மாதப் பிறப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சென்னையில் உள்ள மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து கொண்டனர்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை அடுத்து தமிழகம் முழுவதுமுள்ள ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர். ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் முதல் நாளன்று மாலை அணிந்து தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம்.
ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். இன்று கார்த்திகை மாதப் பிறப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சென்னையில் உள்ள மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து கொண்டனர்.