ஆப்நகரம்

நாளை சந்திர கிரகணம்: இந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டுமாம்!

நாளை வரும் முழு சந்திர கிரகணம் காரணமாக இந்த நட்சத்திரக்காரர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 30 Jan 2018, 2:41 pm
நாளை வரும் முழு சந்திர கிரகணம் காரணமாக இந்த நட்சத்திரக்காரர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.
Samayam Tamil chandra grahan 2018 the star wants to make amends
நாளை சந்திர கிரகணம்: இந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டுமாம்!


ஒரு மாதத்தில் ஒரேயொரு முறை மட்டுமே, பௌர்ணமி நாளில், முழு நிலவை பார்க்கலாம். அதுவும் ஒவ்வொரு 29 நாட்களுக்கு ஒரு முறைதான் பௌர்ணமி வருகிறது. ஆனால், கடந்த ஜனவரி 1ஆம் தேதி பௌர்ணமி என்பதால் முழு நிலவு தோன்றியது. இதே மாதத்திலேயே 31ம் தேதி (நாளை) 2வது முறையும் பௌர்ணமி வருகிறது. இவ்வாறு ஒரே மாதத்தில் தோன்றும் 2வது முழு நிலவுக்குத்தான் ‘ப்ளூ மூன்' என்று பெயர். இந்த நிகழ்வின் போது நிலவு 14% கூடுதல் பிரகாசமாக இருக்கும்.

இந்த நாளில் பின்வரும் ராசி நட்சத்திரக்காரர்கள் நிச்சயமாக பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. பகவான் ஸ்ரீமந் நாராயணனின் இரு திவ்ய நேத்ரங்களில் ஒருவராகவும், நவகிரகங்களில் மனோகராகர் என்று போற்றப்படும் சந்திரனுக்கு தை 18ம் தேதி நாளை 2வது பௌர்ணமி தினத்தன்று கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், புதன் கிழமையன்று பிறந்தவர்களும் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சந்திர கிரகணத்தின் நிழல் படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்