ஆப்நகரம்

சென்னை பக்தர் வழங்கிய தங்கக் கிரீடம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடம், தங்க ஒட்டியாணத்தை சென்னையைச் சேர்ந்த பக்தர் வழங்கினார்.

TOI Contributor 23 Aug 2016, 5:23 pm
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடம், தங்க ஒட்டியாணத்தை சென்னையைச் சேர்ந்த பக்தர் வழங்கினார்.
Samayam Tamil chennai devotee gave golden kireedam to chidambaram nataraja temple
சென்னை பக்தர் வழங்கிய தங்கக் கிரீடம்!


தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் லட்ச ருத்ர பாராயணம், கோடி அர்ச்சனை ஆகியவை கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. இந்த மெகா பூஜையானது வருகிற செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

நிறைவு நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மகா அபிஷேகமும், லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் முதலானவை விமரிசையாக நடைபெறுகிறது என்று சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார். .

இதையொட்டி, சென்னையைச் சேர்ந்த பக்தர் நடராஜப் பெருமானுக்கு நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தங்க ஒட்டியாணமும் செய்து, கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளரிடம் வழங்கினார்.

இதன் மதிப்பு சுமார் ரூ. 25 லட்சம் என்கிறார்கள் தீட்சிதர்கள். ஸ்ரீநடராஜருக்கு தங்கக் கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியாணமும் சிறப்பு ஆராதனைக்குப் பிறகு பொதுதீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்